Monday 20 July 2009

கதைச் சரம் - 5 நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோடத்தில் புகுந்த மாடு


கதைச் சரம் - 5

செவிவழிக் கதை - 3

நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோடத்தில் புகுந்த மாடு

கேரளாவில் நம்பூதிரிகள் உயர் அறிவுடைய மேல்மட்டக் குடியினர். மாலை நேரம், இப்படியான ஒருவரது கத்தரித் தோட்டத்தில் மாடு திடீரென நுழைந்து கத்தரிகளை வேகமாக நாசம் செய்து கொண்டிருந்தது. சாய்வுக் கதிரையில் கண்ணயிர்ந்து கொண்டிருந்த நம்பூதிரியார் திடுக்கிட்டு வழித்து் பார்த்தார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாட்டை விரட்டுவதற்காக உற்றுப் பார்த்தார். அவரது அறிவு கிளர்ந்தெழத் தொடங்கியது......

'மாட்டின் முதுகுத் தண்டில் அடித்தால் முன்னங்கால் செயலிழந்து போகும்!'
'மாட்டின் பின் பக்கத்தில் அடித்தால் பால் சுரப்பி செயலிழந்துவிடும்!'
'மாட்டின் கழுத்தில் அடித்தால் அதன் வாய் செயலிந்து விடும்!'
'தலையில் அடித்தால் மாடே இறந்து போகும்!'.....

என அவரது நரம்படி நுணுக்கப் பார்வையுடன் சிந்தனை ஓடத் தொடங்கியது. செய்வதறியாது திகைத்தப் போனார். இவரது கால தாமதத்தால் மாடு காற்பங்கு தோட்டத்தை நாசமாக்கிவிட்டது.
"பாலு.... டேய் பாலு............ " என வீரிட்ட இவரது வீரிட்ட அழைப்பைக் கேட்ட தோட்க்காரன் பாலு ஓடோடி வந்தான். இவரது பார்வை மாடை நோக்கியிருந்ததைக் கண்ட தோட்டக் காரன் கண நேரம் கூட தாமதிக்காது கையில் கிடைத்த தடியை எடுத்து தாறு மாறாக விளாசியவாறு மாட்டை விரட்டினான். அடியின் கோரம் தாங்காது மாடு கத்தியபடி அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டது.

"ஏன் ஐயா! முன்னமே என்னைக் கூப்பிடவில்லை? எவ்வளவு செடிகளை நாசம் செய்துவிட்டது இந்த மாடு." செல்லக் கோவத்துடன் நம்பூதியை வினவினான் பாலு.

நம்பூதிரி பாலுவின் செயலில் இலயித்தவராகி..... புன்முறுவலிக்கிறார்!


(இக்கதை நான் சிறுவனாக இருந்தபோது எமது உறவினரான நல்லையா வாத்தியார் சொல்லக் கேட்டது.)

- முகிலன்
பாரீஸ் - யூலை 2009

1 comment:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete