Friday 17 July 2009

சரம் - 12 விண்ணாதி விண்ணர்களாக நாம்!!

சரம் - 12 விண்ணாதி விண்ணகர்ளாக நாம்!!
1. சுயபெருமை?


சந்திப்பிடங்களில், நம்மவர் கண்களால் அளவெடுத்து, பகுத்து தகுதிகள் தெரிந்துமெல்லமாகக் கலந்துரையாடல் தொடங்குவது வழமை. இந்தத் தகுதிப்பிரிப்புபுதிய புலம் பெயர் கலாச்சார அளவீடுடாகியுள்ளது. சொந்த வீடுடையவர்கள், வாடகை வீட்டில் இருப்பவர்கள், விசா இல்லாதிருப்பவர்கள் என முதல்கட்டத்திலும், சொந்த வீடுடையவர்களில் - தனியான வீடுடையவர்கள், தொடர்மாடிக் கட்டிட வீடுடையவர்கள் எனவாகவும், வாடகை வீடுடையவர்களில் - தனியார் வீடுகளில் இருப்போர், அரசாங்க வீடுகளில் இருப்போர் எனவாகவும், விசா இல்லாதிருப்போரைத் தனியாகவும் வேறுபிரிக்கும் பாவம்வந்துவிட்டுள்ளது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுடையவர்கள் எல்லோருக்கும்மேலாகவும் இருப்பர். சொத்து இல்லாதவர்களை யாரும் சட்டைசெய்யமாட்டார்கள்.

வட்டமாகக் கூடிநின்றவர்களுடன் நானும் கலந்து கொள்கிறேன். எதிர்காலத்தலைமுறையினர் தொடர்பாக உரையாடல் இருந்தது.

" என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் நன்றாகப் படிப்பித்துப் போட்டன், அந்தமாதிரிக் கெட்டிக்காரங்கள். முதலாவதவன் கனேடியன் கம்பனியில வேலையாகிஇலண்டனில் இருக்கிறான். இரண்டாவது பெட்டடை இந்த முறை பட்டமெடுத்துவெளியேறுகிறாள் இவளுக்கும் இலண்டனில்தான் கல்யாணம்செய்யவுள்ளோம்."

" இங்க நம்ம புள்ளைகள் கலக்குறாங்கள். படிப்பில பேய்க் கெட்டிக்காரங்கள்! " என்கிறார் இன்னொருவர்.

" மொழி தெரியாதிருந்தும் நம்மவர்கள் நன்றாகப் பிள்ளைகளைவளர்திருக்கிறார்கள். ஆனால் இந்த அடைகளைப்(அரபு நாட்டவர்கள்) பாருங்கள்.... எக்கச் சக்கமாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு வாழத்தெரியாமல் இருக்கிறார்கள்...."

" இங்க பாருங்க, எங்களை யூதருடன் மட்டும்தான் ஒப்பிட முடியும்......!"

" தமிழர்கள் என்றா சும்மாவா? யூதர்களிலும் பார்க்க எத்தைனையோ மடங்குவிண்ணர்கள் தெரியுமா? " என்கிறார் உணர்ச்சி மேலிட்டவராககேட்டுக்கொண்டிந்தவர்.

என் எண்ணக்குளத்தில் அடுத்தடுத்து விழும் கருத்துக் கற்களால் விரியும்அலையில் மெளனமாகி உறைந்துப் போகிறேன்.

அந்தக் காலத்தில் நம் செவிவழியாக நேரே உச்சியிலேற்றப்பட்ட வாசகங்கள்மீளவும் நினைவலையில்....
'மோட்டுச் சிங்களவன்...முழு முட்டாள்கள்! அக்க்க....கா!! (சிரிப்பு)'
'வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தானை நம்பக் கூடாது! சரியோ...?'
'இந்தத் தொப்பி பிரட்டிகள் எப்போதும் இப்படித்தான்!.....'
'கிராமத்தான் கவனம்! இவன்கள் காட்டான்கள்... மொக்குத்தனமாக ஏதாவதுசெய்துவிடுவான்கள். ஆட்களை அறிந்து பழகிக் கொள்ள வேண்டும் தம்பி!'

அந்தக் காலத்தில் பல்கலைக் களகத்தில் நுழைந்தபோது, பல்கலைஆற்றல்களுடன் விளங்கிய இந்த மொக்கன்களும், காட்டான்களும், மோடன்களும், தொப்பிகளும், வயிற்றுவலியிலும் மேலானவர்களும்..... இலாடமிடப்பட்டவர்களாக வளர்க்கப்பட்ட நம்மவர்களும் சங்கமித்த காட்சி......!

சிரிப்பதா? அழுவதா?
சுயம் இருந்தால்தானே சுயபெருமை இருக்கும்.

முப்பது வருடங்கள் கடக்கும் புலம்பெயர் வாழ்வில் நம்மவர் மனப்புலப் பெயர்வுமலர்வுக்கான உழவு நடந்ததா?


- அநாமிகன்
பாரீஸ் யூலை 2009

00000000000

2. சாதிகள் இல்லையடி பாப்பா....!
... (பாரதியின் எண்ணம்) நூற்றாண்டு கழிந்து, கண்டங்கள் தாண்டிய நிலையில்!

அடுத்த தலைமுறையின் வீச்சைக் காணுவதும் வியப்புறுவதுமானபுலம்பெயர்வின் மூன்றாவது தசாப்பத்தில் ஒருநாள்.
இலட்சம் ஈரோக்கள் என்று சொல்வதைத்தாண்டி அரை மில்லியன் ஈரோக்களெனசரளமாக உச்சரிக்கும் மாளிகைகள் நம் அடுத்த தலைமுறையினரால் குடிபுகலத்தொடங்கிவிட்டன. இப்படியாக குடிபுகல் நிகழ்ந்த புதிய வீடு நண்பர்களாலும்உறவுகளாலும் களைகட்டியிருந்தது.

இளைஞர்களாக இருந்த இளம் தம்பதியினருக்கு உறவினரின் வருகையும்அவர்களின் விழி பிதுங்கல்களும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. வாழ்த்தவந்தவர்கள் அவர்களையும் மீறியதாகக் கொட்டிய பொறாமை உணர்வால்கொஞ்சம் தள்ளாடிப்போனார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தபோது தெரியாதவிடையங்கள் இப்ப தெரியத் தொடங்கிவிட்டிருந்தன. அதுதானே நீத்துப்பூசணியின் மகிமை, நாவூறு படாதிருக்க கட்டப்படும் பொம்மை, வீட்டு வளவின்வாசலில் வைரவர் சூலம் வைக்க வேண்டிய மக்கியத்துவம் எனப் பலவற்றினைஅறி ஆவல்கொண்டதானது பெற்றோரைக்(இரண்டு பெற்றோரையும்) கிளர்ச்சியூட்டியது. கல்யாணம் கட்டி மூன்றாவது பிள்ளை பெறும்போதும் வராதபொறுப்புணர்ச்சி வீடு வாங்கய போதுதான் வந்துள்ளதை எண்ணி அகமகிழ்ந்துஓடி ஆடி ஒத்தாசைகள் புரிந்தனர்.

புதிய வீட்டின் முற்றக் காற்றைச் சுவாசித்தபடி உறவினர்கள் கதைத்துக்கொண்டிருந்தனர்.
இளந்தம்பதினரின் மூத்த மகன் துடிதாட்டமானவன். தகப்பனாகிய இளைஞன்செய்யும் யோகாசனப் பயிற்சிகளையும் சிலம்பு சுற்றலையும் கை்ககுழந்தையாக இருந்தபோதே பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ இச்சிறுவயதிலேயே சிலம்பு சுற்றப் பழகியிருந்தான். பெரியவர்கள் இருந்து கதைத்துக்கொண்டிருந்த முற்றதில் கம்புடன் வந்த இந்தப் பொடியன் கம்பைச் சுற்றத்தொடங்கினான். இவனது தன்னார்வச் செயற்பாடு அனைவரையும் கதைகளைநிற்பாட்டிக் கவர்ந்தது.

வந்தவரில் ஒருவருக்கு இது புதியதாக இருந்திருக்க வேண்டும். "எப்படி இவன்இதைக் கற்றுக் கொண்டான்?" வார்த்தைகளிலேயே ஆச்சரியத்தின் ஓசைநயமிருந்தது.

"யாருமே பழக்கவில்லை. தானாகத்தான் பழகிச் செய்கிறான்" மகிழ்வுடன் இளம்தந்தை.

"அதெப்படி சொல்லிக் கொடுக்காது பழகுவதற்கு..... சிறுபிள்ளைகளிடத்தில்கவனமாக இருக்கவேண்டும்... அதுவும் தடி தண்டுகள் என்றால் அதீத கவனம்தேவை" முன்னவரின் வார்த்தைகளில் அக்கறை கொட்டியது.

"அது பாருங்கோ எனக்கு சிலம்பு சுற்றவிருப்பம். இதை முறைப்படி கற்றனான். நான் சிலம்பு சுற்றுவதைப் பார்த்து இவனும் சுற்றத் தொடங்கிவிட்டான்" என்றார்சிரித்துக் கொண்டு அந்தத் தந்தை.
சிலம்பின் பெருமை பற்றியும் அதனால் ஏற்படும் ஆராக்கியம் பற்றியும் கொஞ்சம்விளக்கினார் இந்த ஈடுபாட்டில் வாழும் இளம் தந்தை.

"ஓம் தம்பி, நானும் ஊரல கேள்விப்பட்டிருந்தனான்தான். இந்தச் சிலம்புபழகியிருந்தால் நல்ல தற்காப்பாகத்தான் இருக்கும். அங்க நம்ம ஊரில சாதிகுறைந்தவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்!"

'ஆ ஆ!!...' மனதுக்குள் முனகியவாறு சிலம்பாட்டத்தில் ஆர்வத்துடன் இருந்தஇந்த அடுத்த தலைமுறை இளைஞன் துவண்டுதான் போனான்.
காவல் வைரவரை எந்த இடத்தில் வைப்பதென்ற ஆய்வில் இறங்கினர்மூத்தவர்கள்.

- அமலா
(செர்மனி - யூலை 2009)

No comments:

Post a Comment