Wednesday 23 March 2016

முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் (17.09.1953 - 08.03.2015) முதலாவது ஆண்டு நினைவேந்தல் - பாரீசு பிரான்சு

செய்திச் சரம் 31

முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் (17.09.1953 - 08.03.2015)
முதலாவது ஆண்டு நினைவேந்தல் - பாரீசு பிரான்சு


கிபி அரவிந்தன் நினைவு  - புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016  - முடிவுகள் அறிக்கையிடல்!

கவிஞரும் எழுத்தாளரும் சமூகக் கரிசனையாளருமாக புலம்பெயர்வு வாழ்வில் எம்மோடு பாரீசில் வாழ்ந்து மறைந்த கி பி அரவிந்தன் அவர்களது முதலாவது ஆண்டு நினைவேந்தல் பாரீசில் எதிர்வரும் 26.03.2016 சனி மாலை 16.00 மணி முதல் 20.00 மணி வரை நடைபெற ஏற்பாடாகி்யுள்ளது.

Paroisse St Bernard de Chapelle,
5 rue pierre l'ermite, 75018 Paris


இங்கு சிறப்பு அரங்கமாக
காக்கைச் சிறகினிலே (சென்னை) இதழ்க் குழுமம் நடாத்திய 

கிபி அரவிந்தன் நினைவு  - புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016  - முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.


சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான 'காக்கைச் சிறகினிலே' இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடாத்துவதென அறிவித்தது. அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது முலாவது நினைவையொட்டி 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' யை முன்னெடுத்தது. இப்போட்டியின் கடைசி நாளாக 31. 01. 2016 என அறிவிக்கப்பட்டு முடிவு கிபி அரவிந்தன் முதலாவது நினைவு மாதமான மார்ச்சு 2016 இல் அறிவிக்கப்படும் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.


இதன்படியாக இப்போட்டியின் முடிவு 26. 03. 2016 சனியன்று பாரீசில் நடைபெற இருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளது. இப்போட்டியின்
நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழுவினராக 
மதிப்புக்குரிய அ. முத்துலிங்கம் (கனடா), 
மதிப்புக்குரிய மு புஸ்பராசன் (இங்கிலாந்து), 
மதிப்பிற்குரிய இளவாலை விஜயேந்திரன் (நோர்வே), 
மதிப்புக்குரிய அ. யேசுராசா (இலங்கை), 
மதிப்பிற்குரிய ஜோ டி குருஸ் (தமிழ்நாடு)
கலந்து கொண்டனர்.



.........................................................
முதல் பரிசு                      10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு         7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு           5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்


மூன்று ஆறுதல் பரிசுகள்  : காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு வெளிநாட்டுச் சந்தாவும் சான்றிதழும்
...........................................................

நிகழ்வரங்கில்
    • இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்,  ஆய்வாளர்  பி.. காதர் (இங்கிலாந்து)
    • உரைஞர்,  ஆசிரியர் 'செழுங்கலைப் புலவர்' குமரன் (ஜேர்மனி)
    • வில்லிசையாளர்,  கலைஞர்,  எழுத்தாளர் நாச்சிமார் கோவிலடி ராஜன் (ஜேர்மனி)
    • பத்திரிகையாளர், படைப்பாளி நஞ்சுண்ட காடு குணா கவியழகன் (நெதர்லாந்து)
    • புலம்பெயர் ஊடகர், எழுத்தாளர், தமிழ்-3 வானொலி நெறியாளர் றூபன் சிவராசா (நோர்வே)
    • முன்னைநாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத் தலைவர் பாலசுகுமார் (இங்கிலாந்து)
    • கலைஞர்கள் பரா, இந்திரன் குழு (பிரான்சு) 
    • மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், சமூகக் கரிசனையாளர்கள் பங்கேற்கிறார்கள்


முதலாவது ஆண்டு நினைவு மலர் வெளியீடு 
கவிஞர் கிபி அரவிந்தனது  முதலாவது ஆண்டு நினைவு மலரை காக்கை இதழ்க் குழுமம் இவ் வேளையில் வெளியிடுகிறது. இத் தொகுப்பு நூலின் நெறியாளர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களும் தொகுப்பாளர்களாக திருமதி சுமத்தி பிரான்சிஸ் (பிரான்சு) , முகிலன் (பிரான்சு), ச. மா. பன்னீர்ச்செல்வம் (தமிழ்நாடு) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  நூல் வடிவமைப்பினை பசீர் (பைன்லைன்) மேற்கொண்டார். காக்கை வெளியிட்டுள்ளது. 
நூல் விபரம் :  டம்மி 1*8 -  பக்கங்கள் 300 முதலாவது பதிப்பு - மார்ச்சு 2016

000000


00000

நூல் கிடைக்குமிடம்
காக்கை
288 டாக்டர் நடேசன் சாலை, 
திருவல்லிக் கேணி, 
சென்னை 600 005. 
இந்தியா
புலம்பெயர் நாடுகளில் :
Mme Sumathri FRANCIS,


மண்டப விபரம்: https://plus.google.com/109454874060414301814/about
.
அனைவரும் வருக!

 - ஏற்பாடு திருமதி சுமதி பிரான்சிஸ் குடும்பம்
மற்றும் முகிலன்
000000



தொடர்பான தகவல்கள் :



முகிலன்
பாரீசு 23.03.2016