Friday 31 March 2017

முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் – புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017 -

புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017 (வள்ளுவராண்டு 2048)
புலம்பெயர் இணையவலைப் பதிவர் தெரிவு

செய்திச் சரம் 32


முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் (17.09.1953 - 08.03.2015) இரண்டாவது ஆண்டு நினைவேந்தல்



காக்கைச் சிறகினிலே (சென்னை) இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்

கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு  புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017
புலம்பெயர் இணையவலைப் பதிவர் போட்டி  - முடிவுகள்



கவிஞரும் எழுத்தாளரும் சமூகக் கரிசனையாளருமாக புலம்பெயர்வு வாழ்வில் எம்மோடு பாரீசில் வாழ்ந்து மறைந்த கி பி அரவிந்தன் அவர்களது இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் தாங்கி நடாத்தப்பட்ட போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறன.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து புதிய 'கணினித் தமிழாக' நான்காவது பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில் இப்போட்டி அமையப் பெறுகிறது.


சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான 'காக்கைச் சிறகினிலே' இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடாத்துவதென அறிவித்தது. அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது இரண்டாவது நினைவையொட்டி 'புலம்பெயர் இணையவலைப் பதிவர் போட்டி 2017' யை முன்னெடுத்தது. இப்போட்டியின் கடைசி நாளாக 15. 01. 2017 என அறிவிக்கப்பட்டு முடிவு கிபி அரவிந்தன் நினைவு மாதமான மார்ச்சு 2017 இல் அறிவிக்கப்படும் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.

இதன்படியாக இப்போட்டியின் முடிவு 25. 03. 2017 சனியன்று சென்னையில் காக்கைச் சிறகினிலே முகநூல் வாயிலாகவும் ஏப்பிரல் 2017 இதழின் வாயிலாகவும் வெளியிடப்பட்டது. 

இப்போட்டியின்
வழிகாட்டு நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து 

இப்போட்டியில் நடுவர்கள்
இரா எட்வின் (இந்தியா)  
கானாப்பிரபா (அவுத்திரேலியா)  
கவிதா லட்சுமி (நோர்வே)  
முகிலன் (பிரான்சு)  
ஆகியோர் கலந்து கொண்டனர்.







.........................................................
முதல் பரிசு                      : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு         : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு           : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

மூன்று ஆறுதல் பரிசுகள்  : தெரிவான பதிர்வர்களை முன்மொழிந்த சிறந்த வாசகர்களைக் கௌரவித்து காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு சந்தா வழங்கப்படுகிறது.
...........................................................

புலம்பெயர்பெயர்வு வாழ்வில் கனவுகள் சுமந்தவராக எம்மோடு பயணித்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவேந்தலாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமத்தினர்  நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.  மூன்று பரிசுகள் எனவாக மட்டுப்படுத்தப்படடிந்தமையால் பரிசுகள் பின்வருவோருக்கானதாகச் சென்றடைகிறது.

புலம்பெயர்ந்த வாழ்வில் தொடரும் தமிழ்த் தடத்துடன் சுயம்புகளாக இணைய வலைப் பதிவுகளைப் பொறுப்புடன் நிகழ்த்தும் அனைவருக்குமான பரிசுகளின் மாதியாகவே இதனைக் கொள்ளல் பொருத்தம். வாழும் தமிழாக இணையவலைகளூடாக தன்னலமற்ற சேவையாக இவர்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் நிலைபெறும்.

பரிசுக்குரியவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தெரிவிப்பதோடு பொறுப்புடன் இவர்களை அறிமுகம் செய்த வாசகர்களுக்கு மிக்க நன்றிகளையும் காக்கை இதழ்க் குழுமம் இணையவலைத் தொடர்பூடக வாயிலாகப் பதிவு செய்கின்றது. ஆழமான இத்தகைய வாசகர்களை வாஞ்சையுடன் இணயவலைக்கூடாகக் கைகுலுக்கி வரவேற்பதோடு. இந்த வாசகர்களுக்கு ஓராண்டு காக்கை இதழ்களை இலவசமாக அனுப்ப ஆவனசெய்கிறது..

தெரிவான இணையவலைப் பதிவர்களது வெளிப்பாடுகளை இனி வெளிவர இருக்கும் காக்கை பதிவுசெய்யும்.

பரிசுகளுக்கு தெரிவானவர்கள் : 

1. முதற் பரிசு 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

சுடு மணல் (சுவிஸ்)
https://sudumanal.wordpress.com/
ரவி
ravindran.pa 

- முன்மொழிவு : அருந்தா


2. இரண்டாம்பரிசு 7 500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

மின்னேறிஞ்சான் வெளி (நோர்வே)
http://minnirinchan.blogspot.no/
நாவுக்கரசன் 
Naavuk Arasan


- முன்மொழிவு: ரூபன் சிவராசா 


3. மூன்றாம் பரிசு 5 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

கீத மஞ்சரி (அவுஸ்திரேலியா)
www.geethamanjari.blogspot.com.au
கீதா.மதிவாணன் 

Geetha Mathi 


- முன்மொழிவு: யசோதா.பத்மநாதன்.

 
தொடர்பு கொள்க :
kaakkaicirakinile@gmail.com
Kaakkai Cirakinile, 288, Dr natesan Road, Triplicane, chennai 600005 India.
Contact - Mr. V. Muthaiah Tel: 00919841457503

Ø  இந்த இணயைவலைப் பதிவர்களை முன்மொழிந்த 
திருமதி அருந்தா, திரு ரூபன் சிவராசா மற்றும் திருமதி யசோதா பத்மநாதன் ஆகிய முவரையும் சிறந்த வாசகர்களாக காக்கை இதழ்க் குழுமம் கௌரவித்து மகிழ்கிறது.
Ø  புலப்பெயர்வின் நீட்சியில் வெளிவரும் ஆக்கங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் பழக்கமுடைய இத்தகைய வாசகர்கள் அறிமுகமாகியதையிட்டு காக்கை இதழ்க் குழுமம் பெருமை கொள்கிறது. இத்தகைய சிறந்த வாசகர்களை கௌரவித்து ஓர் ஆண்டு காக்கை இதழ்கள் அனுப்ப ஆவனசெய்யப்படுகிறது.
Ø  அதுமட்டுமல்லாது இத்தகைய ஆழமான வாசகர்களுடனான நேச உறவாடலைக் கிரமமாகப் பேண காக்கை இதழ்க் குழுமம் இணையவலையூடாக நன்றியுடன் கைகுலுக்கி மகிழ்கின்றது.


இரண்டாவது ஆண்டு நினைவு
கவிஞர் கிபி அரவிந்தன்  நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017
புலம்பெயர் இணையவலைப் பதிவர் தெரிவு

காக்கை இதழ்க் குழுமம் முன்னெடுக்கும் இந்த தொடர் முயற்சிக்குரிய பரிசுகளை வழங்க பெரும் ஒத்தாசைகளையும் ஊக்கத்தையும் வழங்கும் கிபி அரவிந்தன் குடும்ப அங்கத்தினர் அனைவுருக்கும் குறிப்பாக அவரது துணைவி திருமதி சுமதி பிரான்சிஸ், மகன் அங்கதன் , மகள் மானினி , மற்றும் அவரது சகோதரர் குடும்ப அங்கத்தவர் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள்.

இப்போட்டியை செவ்வனே நடாத்தும் வழிகாட்டு நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து) அவர்களுக்கம்,   இப்போட்டியில் நடுவர்கள் இரா எட்வின் (இந்தியா), கானாப்பிரபா (அவுத்திரேலியா), கவிதா லட்சுமி (நோர்வே), முகிலன் (பிரான்சு) அனைவருக்கம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்..



000000

00000 



தொடர்பு :
காக்கை
288 டாக்டர் நடேசன் சாலை, 
திருவல்லிக் கேணி, 
சென்னை 600 005. 
இந்தியா



 

தகவல் : முகிலன் 25.03.2017

000000




தொடர்பான தகவல்கள் :



 பின்னிணைப்பு:
1.   ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் எ ஸ் எம் கோபாலரத்தினம் (கோபு ஐயா) அவர்களுடன் கிபி அரவிந்தன் 2008 பாரீசில்


2.   கனடாவிலிருந்த வருகைதந்திருந்த நண்பர் இராசரெத்தினம் அவர்களுடன் பிரான்சில் ஒரு சந்திப்பு நண்பர்கள் முகிலன் , பரா மற்றும் கிபி அரவிந்தன்



3.   2007 பொங்கல் விழாவுக்கு சிறப்பு அதிதியாக பாரீசு வச்திருந்த மதிப்புக்குரிய மணவை முஸ்தபா அவர்கள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் நாடு திரும்பியபோது சார்ல் தூ கோல் விமான நிலையத்தில் வழியனுப்பியபோது




முகிலன்
பாரீசு 30.03.2017