Thursday 16 July 2009

செய்திச் சரம் - 3 சுரதா யாழ்வாணனுக்கு தமிழ்க் கணிமை விருதும் - பாராட்டும்!


செய்திச் சரம் 3

சுரதா யாழ்வாணனுக்கு தமிழ்க் கணிமை விருதும் - பாராட்டும்!

காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க்கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதாயாழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித்துறைக்குப் பங்களித்து வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984 முதல் ஜெர்மனியில் வசித்துவருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனியில்தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information electronics) துறையில்மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையானநிரல்களை சுரதா எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையானஎழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE) மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டுமாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ்தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில் தமிழ் எழுதவிரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இதுபெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில்கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாகஇணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தமக்குப்பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும்இந்த நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாகஇருந்தது.

இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களைஉலகத் தரமான யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயேஉள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும்சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில் பார்வையில்லாதவர்களும் தமிழில்கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to speech) நிரலியையும் சுரதாவடிவாக்கி வருகிறார்.

தகவல்: http://www.kalachuvadu.com/issue-114/page79a.asp

சுரதாவின் இணையம்: http://www.suratha.com

கணினிக்கான செயலிகள் பெற : http://www.jaffnalibrary.de/tools/

பொங்கு தமிழ் - எழுத்துருமாற்றி : http://www.suratha.com/reader.htm

வாழும்போதே பாராட்டுவதும் கெளரவிப்பதும் செய்யப்படவேண்டும் என்பதில்சிரத்தையுடையது 'தோரணம்'. புதிய தொழில்நுட்ப யுகத்தில், இன்று நான்காம்தமிழாக தமிழ் கணனி வலைப் பின்னல்களூடாக அழகாகப் பவனி வருகிறது. எமக்குத் தெரிந்த மன்னராட்சி முதல் இன்று தனக்கான தனித்துவமானஅரசாட்சியில் இல்லாத நிலையிலும் தமிழ் கோலோச்சுவதற்கு தன்னலமற்றதமிழார்வலர்களின் அளப்பெரிய பங்களிப்பே காரமாணகும். இதற்கு வரலாறுநெடுகிலும் பல்வேறு சான்றுகளுண்டு. மற்றெல்லா மொழிகளும் அரசுகளின்அரவணைப்பால் வளமூட்டப்படும் போது தமிழ் அரசுகளால் 'தமிழால் முடியுமா? எனவாகக் கேலியுடன் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும்' தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆயிரமாயிரமாண்டுகள் தாண்டியும் வாழும் மொழியாகஇன்று புவியிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்று. இதைக் கடற்கோள் எனதமிழில் அழைக்கப்பட்ட சுனாமியாலும் அழிக்க முடியவில்லை. வரலாற்றில்ஆக்கிரமிப்புகள் செய்த காலனித்துவச் சுனாமிகளாலும் அழிக்க முடியவில்லை.

உலகமொழிகளின் தரத்திற்கு இணையாக நிமிர்ந்து செல்கிறதென்றால் அதுஅன்று தொட்டு இன்று வரை தமிழால் முடியும் என்ற முனைப்புடன்அர்ப்பணிப்புகளை வழங்கிய தமிழார்வலர்களின் தொண்டுகளால்தான எனஉறுதிபட கூறமுடியும். அடுத்த யுகத்திற்கான தமிழ் பயணத்தைஇலகுவாக்கியுள்ளார் சுரதா. தன்னலமற்ற தமிழ்த் தொண்டாற்றியவர்கள்வரிசையில் மதிப்புக்குரிய சுரதா யாழ்வாணனும் இடம்பெறுகிறார் என்பதுமிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

சுரதா யாழ்வாணனின் அளப்பெரிய பங்காற்றியிருப்பதற்கான அங்கீகாரமாககாலச்சுவடால் வழங்கப்பட்ட இந்த விருதை நோக்கலாம். தமிழ்நாட்டு இந்தியஎல்லைகள் தாண்டியநிலையில் சுரதாவிற்கு இப்படியொரு விருதுகிடைத்திருப்பதானது தமிழ்ப் பேசும் உலகினருக்குக் கிடைத்த கெளரவமாகும்.

புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளனைத்தையும் பணமாக்கிக் குவிக்கும்மைக்ரோ சொவ்ற் - உலகமயமாக்கல் சூழலில், தமிழின் எதிர்கால இருப்பிற்கானபயணத்தில்(நான்காம் தமிழ் - கணனி இணையத்தமிழ்) உரமிட்ட சுரதாவின்தன்னலமற்ற பங்களிப்பு மகத்தானது மதிக்கப்படவேண்டியது.


புதிய கணனி இணைய தொழில்நுட்ப உலகின் தமிழ்ப் பயணத்துக்கான அகண்டசாலை அமைத்து இதில் பயணமாவோரின் மகிழ்வில் சங்மித்துள்ள சுரதாவே நீவாழ்க! நீவிர் வாழ்க! வாழ்க!! என மனமார வாழ்த்துகிறோம்.

அன்றைய அதியமான் இன்றிருப்பானாகில் இந்தச் சுரதா யாழ்வாணனுக்கேநெல்லிக்கனி வழங்கப்பட்டிருக்கும்!


-யூலை 2009 பாரீஸ்

2 comments:

  1. நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில
    சுரதாவின் இணையம்: http://www.suratha.com

    கணினிக்கான செயலிகள் பெற : http://www.jaffnalibrary.de/tools/

    பொங்கு தமிழ் - எழுத்துருமாற்றி : http://www.suratha.com/reader.htm

    இவை தான் எனக்குப் பேருதவி புரிந்தன...

    ReplyDelete
    Replies
    1. முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு
      காலம் தாழ்த்தியே தங்கள் பதிலிடக்கு நன்றி தெரிவிக்கிறேன். தாங்கள் இன்று தமிழ் இலக்கியம் தொடர்பாகவும் சங்க இலக்கியங்கள் தொடர்பாகவும் இணையத் தமிழில் ஆற்றிவரும் தொண்டு மிகுந்த நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
      'திருமணங்கள் தொடர்பான தங்களது மாதிரி அட்டைகள் எமக்குப் பெரிதும் உதவுகின்றன.
      வாழ்த்துகள்!! தொடர்வோம் தமிழ்ப் பணி!!

      Delete