Monday 20 July 2009

சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (3)



சுவடுச் சரம் 1
நினைவுத் துளிகள் (3)

- குணன்
__________________________________________________________________
ஈழத்தமிழரின் அமைப்பாக விளங்கிய ஈ.த.ந.கழகத்தின் சார்பாகவும், அன்று இணைந்து செயலாற்றிய, சக ஜேர்மனிய நலன்புரி அமைப்பைச் சார்ந்த பலர், தேவாலய அமைப்பாளர், மனித நேய தொண்டமைப்புக்களைச் சார்ந்த ஆதரவாளர்கள் எனப் பலரோடும், அத்தகையோர்கள் தொடர்பால் அரசியல்வாதிகள் எனப் பலருடனும் பலகாலம் இணைந்து செயலாற்றிய அருமையை எண்ணவே இனிக்கிறது. அண்மைக்காலங்களில், வாழும் நாட்டு மக்களிடை எடுத்துச்செல்லவும், சனநாயகம், தொண்டு மனப்பான்மை, பண்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தூரநோக்கும் - உதவிபுரியும் பண்பும் குன்றி, வெற்றுப் பகட்டும், பொருள்தேடும் பேரவாவும் சேர, நலன்புரிதலற்ற, வியாபாரத் தந்திரங்கள் முன்நிற்கும் பொய்மைத் திரை தெரியவர தேவையற்ற வன்முறைகள் ஊர்வலமாகிப் போக, நல்லவர்கள்- வல்லவர்கள் தூரப்போய்விட்டதுதான் இன்றைய பெரிய சோகம்!
___________________________________________________________________


"கொஞ்சிக் கொஞ்சி உயிர் குடித்தான்“ என்ற கூற்றைப்போல, கம்யுனிஸத்தின் முகத்தை புரட்டிப்போடுவதற்குத் துணிந்தவராக குரபர்ட்சோவ், பழைய பொலிற் பீரோவின் தலைவராக்கப்பட்டது, மேற்குலகம், எதிர்பார்த்திருந்ததுபோல, பேர்லின் நகருக்கு வருகை தந்த அமெரிக்க சனாதிபதி, தனது, “பேர்லின் உரையில்,“ மிஸ்டர் குரபோர்ட்ஸ்சோவ்! பேர்லின் தடுப்பு மதிலை, இடித்து விடுங்கள்!, (அதன் வழியாக,பிரிந்து, துண்டுகளாக்கப்பட்ட, கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளும், அவற்றின் தலை நகர்களாகிய கிழக்கு-மேற்கு பேர்லின் நகரங்களும்,ஒன்றாக மக்களும் மண்ணும் இணைவதாகும்!) என்ற கோரிக்கை, உலகப் புகழ் பெற்றுத் திகழ்ந்து, அதன் விளைவுதான், இன்று, இரத்தம் சிந்தாப் புரட்சியாகப் பெற்றுக்கொண்ட ஜேர்மனியின் இணைப்பும், சோவியத் ரஸ்சியாவின் மாற்றங்கள் மட்டுமன்றி உலக அரசியல்-இராணுவ மாற்றங்களும், குறிப்பாக, கிழக்கு ஐரொப்பிய நாடுகள்,புதிய சிறிய அரசுகள்,முன்னாள் ,“இரும்புத்திரை“ நாடுகள்,ஐரொப்பிய சமூகத்தில் அங்கத்துவ உரிமைபெற வழிவகுத்து- வழிகாட்ட, அடிகோலியது ஜேர்மன் பேர்லின் இணைப்பென்றால் மிகையல்ல! இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில்,பேர்லின் நகர் கண்ட அழிவெனப் பேசும்போது,முழு ஜேர்மன் நாட்டின் அழிவைப்போல,இருமடங்கெனககூறப்படுகின்றது! இதற்கு, யுத்தத்தின் போது, நாசியரசின் தலைநகராக இருந்ததும், ரஸ்ய செம்படையின் கடுமையான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்ததுமாகலாம்! வரலாறு அறிந்திராத அழிவுகளுக்கு முகங்கொடுத்த பேர்லின், இன்று, அதி நவீன, அழகிய, புதிய அறிவியல்,வரலாற்றுடன், உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள், வைத்திய ஆய்வு நிலையங்கள், ஆவணக்காப்பகங்கள், ஐரொபாவில், பசுமை நிறைந்த நகரமாக விளங்குகின்ற பெரு நகராகும்! இந்நகரின் தொடர் வரலாறு 800 வருடங்களைக்கொண்டதாகும்! இரண்டாம் உலகப்போர் முடிந்தும், ஜேர்மன் நாடு, தலைநகர், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் நாட்டின் பெறுமதிவாய்ந்த தேசியச்சொத்துக்கள், போர்வீரர்கள் என அனைத்தையும் குறிப்பாக நேசதேசப்படைகளாகப போரிட்ட நாட்டரசுகளின் படைகள் வசம் ஆயின! பேர்லின் நகரை முதல் கைப்பற்றினாலும் அதனையும், பங்கு பிரிக்கச் சம்மதித்தனர் வெற்றியரசுகள் ஆகிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஸ்யா. தலைநகர் பேர்லின் (கிழக்கு பெர்லின்-கம்யுனிச ஆட்சி), மேற்கு பேர்லின் (அமெரிக்க சார்பு), எனவும் பிரிக்கப்பட்டது!

அகதிகளுக்கு வழி

இரண்டு பகுதிகளாக்கப்பட்டது பேர்லின்நகர், ஜேர்மன் தேசம், ஜேர்மன் குடும்பங்கள், ஆனாலும், எந்த அதிகாரத்தாலும், அம்மக்களின் தாய்மொழியை –ஜேர்மன் மொழியை, ஆங்கிலமாகவோ, பிரஞ்சுமொழியாகவோ, ரஜ்யமொழியாகவோ, மாற்ற முடியவில்லை. வெவ்வேறு கோடபாடு, கொள்கை எனப் பிரிந்து, கடந்த அரைநூற்றாண்டைத் தாண்டி, 1989ல் இணைந்து ஒரே இன மக்களென கைகோத்து நிற்கையில் அதற்கு உதவிய ஒரே காரணி “தங்கள் தாய்மொழி மாறாது பேணிக்காத்து வந்ததுதான்" என்பதை தமிழர்களாகிய நாம் கவனிக்கவேண்டும்!

அரச மற்றும் எங்கு சென்றாலும், ஜேர்மன் மொழி தெரியாது, பிறமொழி மூலம் எதனையும் சாதிப்பது முடியாது! இணைப்புவரையும், பேர்லின் நகரின் பாதுகாப்பு முழமையாக அமெரிக்க கூட்டுப்படைகளின் பொறுப்பில் மேற்கு பேர்லின் நகரும், ரஸ்யப் படைகளின் பொறுப்பில் கிழக்கு பேர்லின் நகர் அடங்க கிழக்கு ஜேர்மனியும் இருந்தன. கிழக்கு-மேற்கு எல்லையில், இருக்கும் “பிரண்டன் பேர்க்" நுழைவாயில், வரலாற்றுச் சிறப்புடையது. இதன் வழியே, நெப்போலியன் படைகள் கிழக்கே சென்றன! கிழக்கு ஜேர்மனியர்கள் மற்றும் கிழக்கு ஐரொபிய நாடுகளில் இருந்து தப்பி தஞ்சம் கோரி வருபவர்களுக்காகவே அரசியல் தஞ்சம் வழங்கும் சட்டம், மேற்கு ஜேர்மன் அரசியல்யாப்பில் மாற்ற முடியாத ஒன்றாக்கப்பட்டிருந்தது.. தற்போது இதனை திருத்தம் செய்துள்ளார்கள்! இதன் வழியாக மட்டுமே, இங்கு வந்து குடியேற முடிந்ததென்பதை மறந்து, “நான் ஒரு அகதி“ என்ற நமது ஆரம்ப முகத்திரையை அறிந்தவர் பலரும் அதனை மறைத்துக் கொள்ளும் இழிசெயல்கள் மூலம் புனிதமாகிய “காப்பை“ களங்கப்படுத்துவதாகவே கொள்ளமுடியும்!

0000


ஜேர்மனியர்கள், தங்கள், தாம் பிறந்த நாட்டை, பிறரைப்போல, “தாய் நாடு“ என்பதற்குப் பதிலாக, பாரதி பாடியிருப்பதைப்போல (“தந்தையர் நாடென்னும் போதினிலே ……!), “தந்தை நாடு“இ (ஏயவநச டுயனெ) என்றே வழங்குவதைக் காணலாம். இங்கு வருபவர்கள் வாழ விரும்புபவர்கள், முதலில், தங்களின் தாய் மொழியறிவு பெற்றிருப்பது இன்றியமையாதது என்பதையே முதலில் அறிவுத்துவார்கள். தொடக்கம், ஈழத்தமிழர்களில், மாணவர்களாக, பல்கலைகழகங்களில் பட்டப்படிப்புக்காக இலங்கையில் இருந்து, வந்த சிலர் இருந்தார்கள்! இவர்களில் தமிழ், சிங்கள மாணவர்களும் அடங்குவர்! இவர்களில், சிலர் ஏதிலியாகிய வந்திருந்த ஈழத்தமிழர்களுக்கு குறிப்பாக மொழி பெயர்ப்பு விடயங்களில் உதவி செய்தார்கள்.

பின்னர் மொழியறிவு பெறுவதற்கு மாநில அரசு உதவி வழங்கிய போதுங்கூட, அந்த உதவியைப் பெற்றுக்கொண்ட பலர், மொழியறிவு பெறாது வாழாதிருந்தார்களென்றே கூறவேண்டும்! இதன் காரணமாக, நிலையான வதிவிட உரிமை பெற்றுக் கொண்டபோதும், மொழியறிவு இன்மையால், சிறந்த வேலைகளைப் பெறமுடியவில்லை! பிற்காலத்தில், குறித்த தரத்தில், மொழியறிவு பெற்றறிருந்தால் மட்டுமே, நிரந்தர வதிவிடவுரிமை வழங்கப்படலாம் என்று அரசாணை பிறப்பித்ததையடுத்து மொழியறிவு பெறவேண்டி பலரும் முயற்சி செய்தார்கள்!

ஆரம்பத்தில், பல்வேறு விண்ணப்பங்கள் அத்தாட்சிகள், விசாரணைகள், என முகங்கொடுக்கவேண்டிய போது ஈழத்தமிழரின் அமைப்பாக விளங்கிய ஈ.த.ந.கழகத்தின் சார்பாகவும், அன்று இணைந்து செயலாற்றிய, சக ஜேர்மனிய நலன்புரி அமைப்பைச் சார்ந்த பலர், தேவாலய அமைப்பாளர், மனித நேய தொண்டமைப்புக்களைச் சார்ந்த ஆதரவாளர்கள் எனப் பலரோடும், அத்தகையோர்கள் தொடர்பால் அரசியல்வாதிகள் எனப் பலருடனும் பலகாலம் இணைந்து செயலாற்றிய அருமையை எண்ணவே இனிக்கிறது. அண்மைக்காலங்களில், வாழும் நாட்டு மக்களிடை எடுத்துச்செல்லவும், சனநாயகம், தொண்டு மனப்பான்மை, பண்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தூரநோக்கும் - உதவிபுரியும் பண்பும் குன்றி, வெற்றுப் பகட்டும், பொருள்தேடும் பேரவாவும் சேர, நலன்புரிதலற்ற, வியாபாரத் தந்திரங்கள் முன்நிற்கும் பொய்மைத் திரை தெரியவர தேவையற்ற வன்முறைகள் ஊர்வலமாகிப் போக, நல்லவர்கள்- வல்லவர்கள் தூரப்போய்விட்டதுதான் இன்றைய பெரிய சோகம்!



யார் இவர்கள்? எங்கிருந்து, ஏன் இங்கு வந்தார்கள்?


1980 முதல் 1984, 85, ஆடி மாதம் 15 வரை, பேர்லின் எல்லை கடந்த எண்ணற்ற தமிழர்கள், இன்று ஜேர்மன் நாட்டை விட, ஏனைய நாடுகள், கனடா போன்ற உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது! இளைஞர்களாகவும், குடும்பம், பிள்ளைகள், பெற்றார் என இணைத்தும், கணவன்-மனைவி என துணையுடனும் வாழ வழிவகுத்து, துணை நிற்காவிட்டாலும், திசை காட்டியாக விளங்கியது பேர்லின் என்பதை வரலாறு என்றென்றும் கூறி நிற்கும்!

1985 முன்பு எல்லை(பேர்லின் மதில்-சுரங்கப் பாதை) அங்கு செல்லமுடியும், அதன் பின்னர் நுழைவு அனுமதி தேவையின்றி பெறமுடியாதென்பதால் தாயகத்திலிருந்து தினமும் கிழக்கு பேர்லின் விமான நிலையம் நோக்கிய தமிழர்கள் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்து விமானங்களில் வந்திறங்கினார்கள். ஏரொபிளட் விமான சேவையே அதிக அளவில் கொழும்பு-மோஸ்கோ வழியாக, "இன்டர்புளுக்" (கிழக்கு ஜேர்மன் ,அரசின் விமானம) கிழக்கு ஜேர்மனிக்குள் வரமுடிந்தது. இவ்வாறு மேற்கு பேர்லினுக்குள் வந்தவர்கள், பற்றிய செய்திகள புகைப்படங்கள்,ஊடகங்களின் முதற் பக்க செய்திகளாக விளங்கின. இவ்வாறு வந்தவர்களில், ஆண்களே அதிகம்! அவர்களில் இளவயதினரே பெரும்பான்மையினராவர்! அவர்கள் தங்கிட வசதியின்றி, புகையிரதத்தை அண்டிய பகுதிகளிலும், இரவில் மட்டும் தங்கும் வசதிகொண்ட (சிற்ரி மிசன்) நிலையத்தில் இரவைக் கழித்தார்கள்.

பகலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டு தெரிந்வர், அறிந்தவர் பற்றி விசாரிக்கவும், இங்குள்ள தமிழருடன் தொடர்கொள்ளவும் முடிந்தது. இவ்வாறு வந்தவர்களில் இருநாற்றைம்பது வரையான தமிழர்கள், பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார்கள் எனச் செய்திகள் தெரிவித்தன. இந்நேரத்தில், தேவாலயங்களைச் சேர்நதவர்களும், மனிதநேய அமைப்புக்களைச் சார்ந்வர்களும், இங்கு அனாதைகளாக வந்தவர்களுக்கு, உணவு, தங்மிட வசதி வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன் ஈழத் தமிழர்கள் பற்றி அறிய முற்பட்டனர். இதனால் கத்தோலிக்க மாணவர் குழவினர் சார்பில் எமது புதிய தமிழர் நலபுரிக் கழகத்தைப் பற்றி அறிந்து, எமது கழக ஆரம்பகால உறுப்பினருடன் சந்தித்து உரையாடிதன் விளைவாக ஊடகச் சந்கிப்பு ஒன்றுக்கு ஏற்பாடாகியது.


(நினைவுத் துளிகள் சொட்டும்)

000000000000000
பிற்குறிப்பு:

தோரணத்தில் புதிய தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாகவெளியேறத் தொடங்கியகளின் ஆரம்பத்தில், இலண்டனும் - ஆங்கிலமும்தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள்பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்குஅச்சாணியாகத்திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப்பிளவுண்டிருந்தஇந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாகஈழத்தமிழரின்முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளைமீட்டுசொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். நினைவுத் துளிகளாகளாகச்சொட்டும் இத்தொடர் வாசகர்களின் கருத்துகளால் மெருகூட்டப்படுமென ஆவல்கொள்கிறார்.

இதைப் புகலிடப் பதிவாக்கிய தோரணம் 'சுவடுச் சரமாக'த் தொங்கவிடுகிறது. இப்பதிவுவாசகர்களின் நினைவுகளைத் தூண்டி இவ்வாறாக இன்னும் பலபதிவர்கள் பதிவிடமுன்வரும் உந்துதல் கிட்டிடவேண்டுமென்பதே தோரணத்தின்அன்பான எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment