Saturday 18 July 2009

சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (2)




சுவடுச் சரம் - 1

நினைவுத் துளிகள் ( 2)
- குணன்

பேர்லின் நகரை வந்து சேர்ந்தநண்பர்களும் நானும், செஞ்சிலுவைவிடுதியின் வாயிலில் திகைத்து, பேதலித்து கைப்பொதிகளுடன் நின்றவேளையில், உள்ளே இருந்து வெளியே வந்தவர்களில் சிலர், தமிழர்களாகவும்இருந்தார்கள். இது எல்லோருக்கும் நம்பிக்கையைத்தர, அவர்களில்ஒருவர்,“நீங்கள், சிறீலங்காவா, தமிழா,?“ என்று கேட்கவும் எமக்கு ஒருவிதநம்பிக்கை பிறந்தது!

இவ்வாறு உரையாடியவேளை மற்றொருவர் தமிழில் "யார் உங்களைஅனுப்பியது?" என்ற கேள்வியுடன் நுழைந்தார். அவர் வந்தவர்களின் ஊரைக்கேட்டுக்கொண்டே "கூட்டமாக நிற்கவேண்டாம் பொலிஸ் கண்டால்அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்" என்று கூறினார். ஏற்கனவே, வேறுமுகாங்களில் இருந்தவர்களில் அவரவர்களின் ஊர்களைச் சேர்ந்தவர்கள், பற்றியவிபரங்களை பரிமாறிக்கொண்டு, "கடவுச்சீட்டு, பணம்(டொலர் செக்)" போன்றவற்றை மட்டும் கைகளில் எடுத்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, பொதிகளை செஞ்சிலுவைச் சங்க விடுதிக்குள் கொணடு; சென்று, பாதுகாப்பாகவைப்பதாக எடுத்துச் சென்றார். கூறியபடி பின்னர் எல்லோரிடமும் அவற்றைச்சேர்த்தார்கள்.

எனது ஊரவர்களாகிய சிறீரங்கநாதன், சரவணபவன், தியாகலிங்கம், துரைராசா, நித்தியானந்தன் ஆகியோருடன் நான் 12.07.1980 அன்று, தங்கிய பேர்லின், கிளைஸ்ட் பார்க் விடுதியில் (4ம் எண் அறையில்) “பேர்லின் முதலிரவு“ நிர்ணயமாயிற்று. நண்பர்களின் நளபாகத்தில், பைக்கட் (வெள்ளை அரிசி) சோறை கோழிக்குழம்புடன் அள்ளி உண்ட அந்த 'முதல் உண்டிக்கு' ஈடாக எதுவும்சுவையாகாது!

நண்பர்கள், மான்குட்டி, பவன் ஆகியோரில் பவனை மட்டும், பத்தாண்டுகளுக்குப்பின்னர் சந்தித்து, அந்த முதல் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன்! அந்தநண்பர்களும், பின்னாட்களில் உறவுகொண்டவர்களும், இங்குவந்துள்ளவர்களுக்காக ஏதாவது ஆற்ற வேண்டி உந்தினார்கள். இதனை தனித்துநிற்காது, இங்கு வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து செயற்படுத்ததூண்டுகோலாக இருந்த பலருள் முத்துலிங்கம், பாலசுப்பிரமணியம் (இதுபற்றிய முழுமையான செய்திகள் அறிய ஈழத் தமிழர் நலன்புரிக் கழக. 25-ம்ஆண்டு மலரை பார்க்க) ஆகியோருடன், இன்று பேர்லின்வாசிகளாகியதமிழன்பர்கள் செல்வராசா, சத்தியநேசன், கணேசன், பரமலிங்கம், உட்படபேர்லினை விட்டுச்சென்றவர்கள் பலரும் அடங்குவர்.

தமிழருக்கு(புலம்பெயர்ந்திருப்பவர்கள், புதிதாக வருபவர்கள், போதிய சான்றுகள்அல்லது தாம் இங்கு ஏன் வந்தோம் என்ற காரணங்களைக் கூறத்தவறியவர்கள், பிழையான தகவல் கூறிய காரணத்தால் திருப்பி நாடு கடத்தப்படசிறைக்காவலில் வைக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு பல்வேறு அமைப்புக்கள்மூலம் உதவி புரியவும் வேண்டி முதன் முதலாக, பேர்லின் வாழ் தமிழருக்கானநலன்புரிக் கழகமாகிய, “ஈழத்தமிழர் நலன்புரிக் கழகம்" என்ற பெயருடன், பொஸ்டமர் வீதி 147 இலக்க விடுதியின், 304 ம் இலக்க அறையில், ஐம்பதுபுலம்பெயர் தமிழர் கூடிய அங்குரார்ப்பணக் கூட்டம் தற்காலிகத் தலைவர்தலைமையில் புதியதான புலம்பெயர் தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டது, இதன்வரலாறு, ஆண்டுகள் இருபத்தைந்தைத் தாண்டடியுள்ளது. இது புலம்பெயர்தமிழர் வரலாற்றில் பேசப்படும் ஒன்றென்பதை தமிழர்கள் புலம்பெயர்வாழ்வில்மறந்தாலும், நிச்சயம் பேர்லின் பல்கலைக்கழக ஆவணக்காப்பகம் நூற்றாண்டுதாண்டியும் பேசும்!
000000000000


கடந்த அரை நூற்றாண்டுக் காலப் பரப்பை எண்ணிப் பார்க்கையில், ஈழத்தமிழர்களுக்கு சமூக,பொருளாதாரம், கல்வி, பண்பாடு என அனைத்திலும்புலப்பெயர்வையும், பிறந்த நாட்டின் நிலையையும் வேறு வேறு தொனிகளில்பேசப்படுவதைக் காணலாம். இன்றும், நாளையும் .இனிவருங்காலங்களிலும்ஒன்றில் ஒன்றை இணைத்துப் பிணைத்தோ, அல்லது ஒன்றை ஒன்று தாங்கிச்செல்லும் வாய்ப்பும் வசதிகள் இருந்தும் வழி காட்ட முடியுமா? என்பதற்குஇப்போது பதில் கூறமுடியாது!

இரண்டாம் தலைமுறையைத் தாண்டி, வளரப்போகும் மற்றொரு தலைமுறைஒன்றின் நிலை எவ்வாறு திசை திரும்பும் என்பதை புலம்பெயர் சமூகம்புரிந்துகொள்ளவே செய்யும்! அப்படியாயின், அதற்குத் தனது ஆணிவேரைப்பேணி, அடையாளங்காட்டவும், அதனைக்கொண்டு தனது, அடுத்து, தொடரும்புதிய தலைமுறை புரிந்துகொண்டு, முன்னோர் தந்து சென்ற அருஞ்செல்வங்கள்அனைத்தும் காத்துப் பேணும் கடமை தெரிந்து, பிறப்புரிமைகளை காத்துப் பேண, வரலாற்றுத் தேரை விழிப்புணர்வெனும் வடம்பிடித்து இழுக்குமா? இன்றேல்யாவையும் கைநழுவ விட்டு, அடையாளமற்று, வாழ்விடம் - உறவு - உரிமைஎதுவும் தெரியாது ஐரோப்பிய நாடுகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட சிந்தி, ரோமாபோலாகுமா?

மாறாது காப்பாற்ற நாமும் நம்மை அமைப்பாக்கி செயற்பட வேண்டும் என்றஎண்ணத்தை வண்ணமாக்கி முனைப்போடு எழுந்திடற் செய்தலே முதற்படியாகவேண்டும். 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்ற முதுமொழிக் கருத்தில்ஈர்க்கப்ட்டவர்களாகி செயலுருப் பெறல் வேண்டும்.

மண்ணை மறக்குமா மனம், அதனை துறந்திட முடியுமா, முயலுமா தினம்!
தாயை-தாய் நாட்டை, தாய் மொழியை பேணிக் காக்க வேண்டியது, ஒவ்வொருமனிதனின் தவிர்க்கமுடியாத கடமையாகும்! இன்றேல் உலகில் உயிர் வாழ்க்கைபொருளற்றதாகி விழுந்து விடும்!

சீனமக்கள் இயற்கையோடியைந்து, ஐயாயிரம் ஆண்டு தொடர் வரலாற்றையும், வைத்திய முறைகளையும், உணவு முறைகளையும் இன்றும் பேணிப் போற்றிவருபவர்கள்! அவர்களின் மேற்கூறிய மூன்று பற்றுக்களையும் விட்டுக்கொடுக்கமுன்வந்ததில்லை! மனித உடலின் மண்ணீரல் என்ற உள்ளுறுப்பின் முதன்மைச்செயற்பாடு உண்ணும் உணவிலிருந்து, பிராண வாயுவைப் பிரித்து, நுரையீரலுக்கு செலுத்தி, உயிரார் வாழ, ஏனைய உறுப்பைக் காப்பாற்றுகின்றஇயற்கையின் மிகப்பெரிய விந்தைச் செயலாகும்! அதே போன்று, தாய்-தாய்மொழி, தாய்மண்(பிறந்தமண்) என வரும்போது, உலகில் வாழும்ஒவ்வொரு மனிதனுக்கும், இந்த ஒப்பற்ற உயிர் போன்ற உறவை ஊட்டுவதும், “மண்ணீரல்“ என்பதால்தான் இப்பெயரிடப்பட்டதென்று சீன மருத்துவம்கூறுகிறது போலும்!

வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள், தமது தாய் நாட்டில், யாவும் வழமையெய்தியதும், திரும்பவேண்டியவர்கள் அல்லது நாடு கடத்தும்வாய்ப்புள்ளவர்கள். இவ்வாறு புலப்பெயர்வில் வாழ்கின்றவர்களில் கொடியகுற்றம் புரிந்தவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதைப் பலரும் அறிவார்கள். தொடக்ககாலத்தில் அகதி நிலை தேடி அனுமதியின்றி(விசா இன்றி) நாட்டிற்குள்சட்டவிரோதமாக நுழைந்ததால், வந்த பாதைவழியே திருப்பி அனுப்பப்பட்டும்உள்ளனர். இவர்கள் இரண்டாவது முறையும் நுழைந்தால் கைது செய்து காவலில்வைப்பதும் விசாரணையின் பின்னர், அனுமதிப்பதா? அல்லது நாடுகடத்துவதா? என்பது முடிவாகி அப்போதே நடைபெற்றது. எண்பது முதல் எண்பத்தைந்து ஆடிவரை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் குறிப்பாகஇளைஞர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்கள் எனப் பல வயதினரும்பேர்லின் வந்தடைந்தனர். கிழக்கு-மேற்கு பேர்லின் இருவேறு அரசியல்கோட்பாடுகளைக் கொண்டதும் மிகுந்த,“கொதிநிலை“யில், பொதுவுடமை-முதலாளித்துவ முரண்பாடுகளின் மோதுகளமாகி, மூன்றாவது உலக யுத்தத்தின், “திறவுவாயிலாகுமோ என உலகின் இரண்டாவது உலக யுத்தத்தின்இறுதிக்களமாகத் திகழ்ந்த பேர்லின், மீண்டும் ஒரு இரணகளமாகிவிடலாம் என்றஅச்சம் 1989 -ம் ஆண்டுவரை இருந்தது.

குரபோர்ட்ஸ்ஸோவ் -கேல்மட் கோல் முயற்சியால், இரத்தம் சிந்தாப் புரட்சிமூலம், 44 வருடங்களுக்ப் பின்னர், பிரிந்து-பிரித்து வைத்து அவதியுற்றஜேர்மனியர்கள் குறுக்கே நின்ற கல் மதிலை, தூள்,தூளாக்கி கைகோத்தும் - கட்டியணைத்தும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கித் திளைத்தார்கள் செர்மானியர்கள்! நம் கண்முன்னால் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதான கணத்தில்சுவரின் முன்னால் நாமும் இருந்தோம் என்பதை நினைக்கவே புளங்காகிதமாகஇருக்கிறது.

(நினைவுத் துளிகள் சொட்டும்)


0000000

பிற்குறிப்பு:

தோரணத்தில் புதிய தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாகவெளியேறத் தொடங்கிய 80களின் ஆரம்பத்தில், இலண்டனும் - ஆங்கிலமும்தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள் பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்கு அச்சாணியாகத்திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப் பிளவுண்டிருந்தஇந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாக ஈழத்தமிழரின்முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளை மீட்டுசொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். நினைவுத் துளிகளாகளாகச்சொட்டும் இத் தொடர் வாசகர்களின் கருத்துகளால் மெருகூட்டப்படுமென ஆவல்கொள்கிறார்.

இதைப் புகலிடப் பதிவாக்கிய தோரணம் 'சுவடுச் சரமாக'த் தொங்கவிடுகிறது. இப்பதிவு வாசகர்களின் நினைவுகளைத் தூண்டி இவ்வாறாக இன்னும் பலபதிவர்கள் பதிவிட முன்வரும் உந்துதல் கிட்டிடவேண்டுமென்பதே தோரணத்தின்அன்பான எதிர்பார்ப்பு.


0000000000

1 comment: