Saturday 27 June 2009

கதைச் சரம் - 2 கி.பி. 2103ல் நான்



கி.பி. 2103ல் நான்
அறிவியல் புனை கதை: எதிர்வுகூறல் கதைகள்

பொ. கனகசபாபதி


நடைபெறும் காலம் : 2103
நடைபெறுமிடம் : கற்பனையூர்

கி.பி. 2103 புரட்டாதி மாதம் 4ம் தேதி அதிகாலை விசாலமான ஒரு வீதி வழியாகநான் நடந்து செல்கிறேன். 'அட பாவி! உனக்கு இப்பவே (அதாவது 2007ல்) 72 வயது. இன்னும் நூறு வருசங்கள் இருக்க வெண்டுமென்ற ஆசையா பாவி!' என்கிறீர்களா?
'ஏனையா அவசரப்படுகிறீர்கள்?'
'யாரையா சொன்னான் நான் உயிரோடு இருப்பதாக?'
நான் செத்துச் சாம்பலாகி எழுபத்தைந்து வருடங்களாகிவிட்டன. அங்கே நான்போனதும், சித்திரகுப்பதன் எழுதி வைத்த குற்றப்ப பட்டியலை வாசிக்கும்படிஇமயதர்மராஜன் வாசிக்க உத்தரவுபோட்டார்.
"இந்தத் தடியன் செய்த எல்லாக் குற்றங்களிலும் பாரிய குற்றம் ஒன்று உள்ளதுதர்மராஜாவே!" என்ற முன்னுரையுடன் ஆரம்பித்தான் சித்திரகுப்பதன். காலன்ஒரு உறுமல் விட்டான். எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டது.
"இவன் குறைந்தது ஐநூறு டொக்கடரகளையாவது உருவாக்கியிருக்கிறான்!"
"இந்தப் பாவிகளால் நமது கிங்கர்களால் தமது கடமைகளை ஒழுங்காகச்செய்யமுடியவில்லை. நாம் தயாரித்த பட்டியல்படி புரோகவாசிகளை இந்கேகொண்டுவர முடியவில்லை. அங்கோ பாவாத்துமாக்களின் தொலை்லைஅதிகரித்துக் காண்டுபோகிறது. புமியின் பாரம் தாங்க முடியவில்லை எனச்சொல்லி பூமாதேவி குறைகூறுகிறார். நமது கிங்கர்கள் கையூட்டு ஏதாயினும்வாங்கிக் காண்டு தமது கடைமையில் கவனம் செலுத்தாமல்தட்டிக்கழித்தார்களோ என்கிற சந்தேகம் கொள்வதாக ஒரு நினைவூட்டல்கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார் மகாராஜா".

'முன்னர் மார்க்கண்டேயன் சம்பந்தமாக நீங்கள் உதைபட்டு மயங்கிக்கிடந்தபோதும் இப்படித்தான் பூமாதேவி கஷ்டப்பட்டார் காலதேவனே!' என்றார்சித்திரகுப்தன். உதைபட்டது, இமயதர்மராஜன் மானப்பிரச்சனை. நான்இமயலோகப் பிரஜை என்பதற்காகச் சொல்லவி்ல்லை, சிந்தித்துப்பார்த்தீர்களென்றால் உங்களுக்கும் புரியும். இந்த விடையத்தில் சிவபெருமான்செய்தது படா அடாவடித்தனம். ஒருவன் தன் கடமையைச் செய்யும்போதுபாராட்ட வேண்டும். அட சரி, பாராட்டத்தான் மனம் வராவிட்டால் இப்படியாசெய்வது? மார்க்கண்டேயன் கட்டிப்பிடித்துக்கொண்டால் இயமனை மயக்கம்அடையக் காலால் உதைப்பதா? மிருகண்டு முனிவருக்கு பதினாறுவருடங்களுக்கு முன்னரேயே இது தெரிந்த விசயம்தானே. எப்போ அப்பீல்மனுசெய்து தீர்ப்பை மாற்றி எழுதியிருக்கலாம் அல்லவா? பாவம்இயமதரமராஜன் வாயில்லாப் பூச்சி உதைபட்டான். என்றோ ஒருநாள்அவனுக்கும் காலம் வரும் அதுவரை பொறு மனமே பொறு.'

இயமன் சித்திரகுப்தனைப் பார்த்து சிவாஜி கட்டப்பொம்மனில் விட்டது போன்றஒரு உறுமலுடன், "இச்சமூகத் துரோகிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? நீயே சொல்லு" என்றார் தர்மராஜா.

இங்கே என்ன எங்கேயும்.... மடப்பள்ளிதானே பிரச்சனைக்குரிய இடம். அங்கேஇருநூறு வருடங்கள் மேற்பார்வை செய்யவேண்டும்" என்று கட்டளைபிறப்பித்தார் சித்திரகுப்தன். 'அப்படியே ஆகட்டும்' என்றார் தருமராஜன்.

'இதனால் ஒரு இலாபம் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் போகுது. அதோடுமாத்திரமில்ல அங்கே மண்ணுலகத்தில் என்னோடு அரட்டை அடித்த பலநண்பர்களும் இங்கே இருப்பதால் அரட்டைக் கச்சேரிகளுக்கும் பஞ்சமில்லை. பொழுதும் உல்லாசமாகப் போகுது. ஒன்றும் பெரிய அளவில் வித்தியாசமாகஇருப்பதாகத் தெரியவில்லை. அதனாலென்ன நூறு வருடங்கள் முடிந்ததும்தண்டனையை மீள்பார்வை செய்வார்கள். பரோல் கொடுப்பதுபற்றி அப்போதுமுடிவு எடுப்பார்கள். நமக்கு அது கிடைக்காமலும் போனாலும் பரவாயில்லை... ஆனால் இடமாற்றம் வராவிட்டால் அதிர்ஷ்டம். நான் வணங்கும் எருமைவாகனனிடம் வேண்டுவதெல்லாம் இதுவே.'

உங்கு கோயில் குளமெனத் திரிந்த ஒரு சிலர் இங்கே மேலுலகவாசிகள். அதாவதுசொர்க்கவாசிகள். வருடத்தில் ஒரு நாள் இரண்டு உலகவாசிகளுக்கிடையிலானஒன்றுகூடல் நடைபெறுவதுண்டு. அன்றுதான் அவர்களைக் காணமுடியும். பரிதாபம்! பரிதாபம்!! தாடி மீசை, சடாமுடி சகிதம் "சிவ சிவா" எனஉருத்திராட்சைக் கொட்டையை உருட்டியபடி இருந்தனர். பார்க்கவேபரிதாபகரமாக இருந்தது. 'சிவ சத்தியமாக ஐயையோ தப்பு! இயம சத்தியமாகச்சொல்கிறேன், ஒரு நாள் கூட அங்கே போயிருக்கச் சம்மதிக்கமாட்டேன்.'
'நீதானே நிறைய வாசிப்பாய், அப்போ பத்திரிகைகள், வானொலிகள்.... என்கிறீர்களா?'
'எந்த உலகத்தில் ஐயா நீங்கள் இருக்கிறீர்கள்? ஓ நீங்கள் மண்ணுலகவாசிகள்அல்லவோ, உங்கள் கேள்வி உங்களுக்கே அசட்டுத்தனமாகத்தெரியவில்லையா?'

இங்கே மடப்பள்ளியில் எனது 75 வருட சேவைப் பாராட்டி பெரு மனசு வைத்துமூன்று நாள் விடுப்புத் தந்தார்கள். எனது பிறந்தகத்தைப் பார்க்க ஆசையாகஇருக்கிறதெனக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ உத்தரவு பெற்று வந்ததால்தான்இங்கே நிற்கிறேன்.
'இங்கு நிற்கிறேன் எனச் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! நான்அருவமான நரகலோகவாசி. என்னை ஒருவராலும் பார்க்க முடியாது. ஆனால்நான் எல்லாவற்றையும் பார்ப்பேன்! சரி.. சரி... பழையபடி ஆரம்பத்துக்கேவருவோம்.'

விசாலமான வீதி வழியாக நடந்து சென்றேன் எனக் கூறினேன் அல்லவா? உயர்ந்த மரங்கள் நடுவே பெரிய அடுக்ககளைக் கொண்ட மாளிகை உன்றுகம்பீரமாக நின்றது. மாளிகையின் முன்னே "ஈண் இல்லம்" என்ற பெயர்ப் பலகைஇருந்தது. அதன் கீழே 'இங்கு பிள்ளைகள் பெற்றுக் கொடுக்கப்படும்' என்றஇன்னொரு அட்டையும் காணப்பட்டது. வாயிலில் இருவர் மனித உடலும் நாய்முகமுமாகக் காவல் புரிந்து கொண்டிருந்தனர். அப்போ இவர்கள்தான்காவல்க்கார வர்க்கமா? மின்னியல் படலை திறந்த போது நான் மெல்ல நழுவிஉள்ளே சென்றுவிட்டேன்.

பெரிய மாளிகை. கர்ப்பம் தரித்த பல பெண்களஇ மாடு போன்ற தலையுடன் நின்றுபல்வேறு வகையான அப்பியாசங்களைச் செய்துகொண்டிருந்தனர். இவர்களெல்லோருமே மகப்பேறுக்கு அனுசரணையாக இருக்கும் விதமாகஅப்பியாசங்களைச் செய்து கொண்டிருந்தனர். அப்படியாக விறாந்தைப் பக்கமாகச்சென்று அலுவலக அறையை அடைந்தேன். அதன் வெளியே பலர் சோடியாகவும், தனித்தனியேயும் ஆசனங்களில் அமர்ந்திருந்தார்கள். இருப்பதற்கு முன்னர்இங்கிருந்த பொறியிலிருந்து தமக்கான எண்குறித்த சிட்டையைப் பெற்றுஅவ்வெண்ணின் அழைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

முதல் அழைக்கப்பட்டதும் இரு இளவயதினர் எழுந்தனர். மிக்க நெருக்கமாகஒருவரை ஒருவர் தழுவியபடி சென்றதோடில்லாமல் இருந்த இடத்திலிருந்துஅலுவலகத்தின் உள்ளே புகுவதற்கு முன்னர் மூன்று முறையாகிலும் முத்தம்கொடுத்திருப்பார்கள். அவ்வளவு அந்நியோன்னியமான தம்பதிகளாக இருந்தனர். நெருங்கிப் ஆவல் மிகுதியால் அவர்கள் முகங்களை உற்றுப் பார்க்கிறேன் 'ஆ! ஆ!! ' இருவரும் ஆண்கள். எனவே என்ன நடக்கப் பொகிறது என்ற ஆவலிலேநானும் தொடர்ந்தேன். உள்ளே சென்றார்கள். அலுவலர் இவர்களை முகமன் கூறிவரவேற்றதும் வந்த விசயம் பற்றி விசாரித்தார். அவர்களில் கணவன் போன்றவர்தமக்கு ஒரு குழந்தை வேணும் எனக் கூறினார். உடனே அலுவலர் கணினியின்பொத்தானை அமுக்க, பெரிதாக திரையிலே காட்சி விரிகிறது.

உங்கள் உடற்கலம் ஒன்றினை எடுத்து முளைவகையாக்கல்(cloning) முலம்விருத்தியுறச் செய்தல். இக் குழந்தை எப்பொதும் ஆண் குழந்தையாகவேபிறக்கும்.

ஒரு பெண்ணின் முட்டை ஒன்றினை விலைக்கு வாங்கி அதனை உங்கள்ஒருவரின் விந்துவால் கருக்கட்ட வைத்து விருத்தியுற வைத்தல். இக் குழந்தைஆணாக வருமா, பெண்ணாக வருமா எனச் சொல்ல முடியாது.

ஒரு பெண் குழந்தை வேண்டுமாயின் பெண் ஒருவரிடம் முட்டை ஒன்றினைவிலைக்கு வாங்கி அம்முட்டையைக் கன்னிப் பிறப்பின்(parthenogenisis) மூலம்விருத்தியுற வைக்கவேண்டும்.

விருத்தி தூண்டப்பட்ட இவ் முளையங்கள் மேற்கொண்டு விருத்தியைநடத்துவதாயின் அவை பதிக்கப்படல் வேண்டும். அதனை உங்கள் உடற் குழியின்உள்ளே பதித்து குறிப்பிட்ட காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் வெளியேஎடுக்கலாம்.

ஈன்றாள்(surrogate) ஒருத்தியுடன் ஒப்பந்தம் செய்து அவளிடத்தில் முளையவிருத்திக்கான பொறுப்பினை ஒப்படைக்கலாம்.

அலுவலர் தமது ஈண் இல்லம் இத்தகைய தொண்டாற்றுவதற்காகவேஉருவாக்கப்பட்டதாகவும் இதற்காகவே மாதச் சம்பளத்தில் ஈன்றாள் பெண்களைவைத்திருப்பதாகவும், வைத்தியர்களுடைய கண்காணிப்பில் அவர்களதுஒவ்வொரு செயலும் நடைபெறும் எனவும் கூறினார். அவர்கள்தான்உடற்பயிற்சிக்கூடத்தில் அப்பியாசங்கள் செய்து கொண்டிருந்த மாட்டுப்பெண்கள் என அறிந்துகொண்டேன். அதற்கான உத்தேச செலவினையும் எடுத்துக்கூறினார்.

அப்போது நேரம் காலை 10:00 மணியாயிருந்தது. ஆலயமணியின் ஓசை போன்றுமூன்று முறை கேட்டது. உட்காந்திருந்தவர்களெல்லோரும் பயபக்தியோடுஎழுந்தார்கள். தமது தலைகளை வெண்ணிறக் கைக்குட்டையால் போர்த்தியபடிஒரே திசையில் அமைதியாக நடந்து சென்றார்கள். நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் யாபேரும் விசாலமான ஆலயத்தின் உள்ளே சென்றார்கள். கறுத்தஅங்கி அணிந்த ஒருவரே பூஜ்ஜியர். சிறிது நேரத்தில் அவர் பாடத் தொடங்கியதும்எல்லோரும் சேர்ந்து பாடினார்கள்.

உலகத்து நாயகனே - எங்கள் நொஸ்றாடேமஸ்!
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
கலகத் தரக்கர் பலர் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
கருத்தினிலே புகுந்துவிட்டார் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
நிலை எங்கும் காணவில்லை - எங்கள் நொஸ்றாடேமஸ்!
நின்பாதம் சரண் புகுந்தோம் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் நொஸ்றாடேமஸ்!
பேதமைக்கு மாற்றில்லை - எங்கள் நொஸ்றாடேமஸ்!
அணிகளுக்கோ எல்லையில்லை - எங்கள் நொஸ்றாடேமஸ்!
அடைக்கலமிங் குனைப் புகுந்தோம் - எங்கள் நொஸ்றாடேமஸ்!

எல்லோரும் பக்திச் சிரத்தையுடன் பாடியபின்னர் மீண்டும் தமது அலுவல்களைநோக்கிச் சென்றனர். அனாவசியமாகக் கூட்டம் கூட்டமாக நின்று பெசி நேரத்தைவீணாக்கவில்லை. எனக்கும் சிறிது சிறிதாக விஷயம் புரியத் தொடங்கியது.
இதுவொரு புதிய மதம். கிறுக்கன் நொஸ்றாடேமஸ் என அன்று ஏளனம்செய்யப்பட்டவர் இன்று வணக்கத்துக்குரிய தெய்வமாகிவிட்டார். விரையில்மனிதன் நீரில் வாழும் மனித இனத்தை(Aqua- humanis) உருவாக்குவான் எனநொஸ்றாடேமஸ் முன்னரே ஆரூடம் கூறியிருந்தார்.

இதோ என் கண்முன்னேயே அதற்கான முதல் படிகளாய் மாட்டுத்தலையுடன்மனிதர்களையும்(Bovi- humanis), நாய்த் தலையுடன்(Canis- humanis) கூடியமனிதர்களையும் காண்கிறேன். நொஸ்றாடேமஸ் வணக்கத்துக்குரியவர்தான்! மறுப்பதற்கில்லை.

ஆலயத்தைவிட்டு வெளியேறிய நான் சிந்தித்தபடியே கால்போன போக்கில்நடந்து செல்கிறேன். உனக்கு முன்னால் வேகமாக வந்த மோட்டார் வண்டி ஒன்றுஒரு பெரிய வியாபார மையத்தின் முன்னர் சடுதியாக நின்றதால் நிமிர்ந்துபார்க்கிறேன். "ஈசன் மனித உதிரிப்பாகங்கள் விற்பனை மையம்" என்றபெயர்ப்பலகை காணப்படுகிறது. பல நாடுகளிலே 2050 ஆண்டு வாக்கிலேமருத்துவ முளைவகையாக்கல்(clinical cloning) சட்ட ரீதியாகஅனுமதிக்கப்பட்டமையால் முளைவிரத்தி நடாத்தப்பட்டுஉதிரிப்பாகங்களுக்காகவே முளையங்கள் வளர்க்கப்படுகின்றன. உந்தஉடறுப்பும் தேவைக்கேற்ற வகையில் வியாபார மையங்களில்பெறக்கூடியதாகவுள்ளது.

மோட்டார் வண்டியில் வந்தவர் விற்பனை மையத்தின உள்ளே சென்று " 'O'வகைஇடப்பக்க சிறு நீரகம் ஒன்று தரமுடியுமா?" எனச் சிப்பந்தியிடம் கேட்கிறார்.
"'O'வகை எடுப்பது கொஞ்சம் சிரமம். அப்படிக் கிடைத்தாலும் இதற்கு இரட்டிப்புவிலை கொடுக்கவேண்டும்." என்கிறார் சிப்பந்தி.
வந்தவர் கொஞ்சம் பசையுள்ளவர் போலும்! அவரது மோட்டார் வண்டியின்பொலிவில் தெரிவதை சிப்பந்தி அவதானித்திருப்பார்.
"விலையைப் பற்றி கவலையில்லை. நல்லதாக ஒன்று தரமுடியுமா?" என்கிறார்வந்தவர். அச்சமயம் அவருடன் ஒட்டி நின்ற அவரது மனைவி அவர் காதினுள்ஏதோ கடிந்தார். நேராகவும் நேர்த்தியாகவும் அகலமாகவம் இருந்த வீதியின்எதிர்ப்புறத்தை தன் சுட்டுவிரலால் சுட்டிக் கிசுகிசுத்தார். திரும்பிப் பார்க்கிறேன். எதிர்புறமிருந்த குளோனிங் கொப்பி சென்றர்(Cloning copy center) விற்பனைமையத்தில் ' சேல்' பதாகைகள் மிளிர்கின்றன. ' சேல் நடைமெறுவதையும்பார்த்துவிட்டு வாங்கலாம்தானே என்று சொல்லியிருப்பார் போலும்!'
ஆச்சரியம் தாங்கமாட்டாது அவர்களைப் பின் தொடர்கிறேன். வீதியன் கீழாகஅமைந்த சுரங்கப் பாதை வழியாக எதிர்புறத்தில் மேலே ஏறவும் எனதுசெல்லிடபேசி(Cell phone) "கிணிங்.. கிணிங்" என்கிறது.(இதன் ஓசை எனக்குமட்டும்தான் கேட்கும்) எடுத்தால், அங்கே மடப்பள்ளியல் பெரிய ரகளையாம். எனது விடுப்பு ரத்தாகி விட்டதாம். உடனடியாக வேலையில் ஆஜராகுமாறு பணித்த இமயதர்மராஜனின் உத்தரவு செய்திப் பதிவாக வந்திருந்தது.
இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

அவசரமாகத் திரும்புகிறேன். பிறிதொரு முறை சந்திப்போம்!
"

நன்றி: திறவுகோல் -(வெற்றிமணி மற்றும் சேமமடு வெளியீடு)
000000

பிற்குறிப்பு:
எமது தமிழ் இலக்கியத்தில், அறிவியல் புனைவுகள் மற்றும் எதிர்காலக் எதிர்வுப்புனைவுகள் என்பன விருத்தியுறவேண்டும். உலகெங்கும் மொழிகடந்து - கண்டங்கடந்து விரவி வாழும் வாய்ப்புக் கிடைத்துள்ள ஈழத் தமிழனரின்எதிர்காலச் சந்ததியினரால் புதிய இலக்கியங்கள் வெளிப்படுமென்றுநம்புபவர்களில் நானும் ஒருவன். இவற்றுக்கு தொடக்கத் தூண்டுதலாக அதிபரின்முயற்சிகள் அமையட்டும்!!





நொஸ்றாடேமஸ் (Nostradamus):


நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஒரு யோகி. அவர் முன்கூட்டியே உலகில் நடைபெறப்போகின்ற பல நிகழ்வுகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். அயற்றில் பல நடந்துவிட்டன. இன்னும் பல நடக்குமென பலரும் நம்புகிறார்கள். மனித இனத்தை உயிரியல் இரீதியாக ஹோமோ சாப்பியன்ஸ் (Homo sapiens)என அழைப்பர். எல்லோரும் ஒத்த உருவ அமைப்புடையவர் என்பதே இதன் அர்த்தம். உதட்டின் தடிப்பில், சருமத்தின் நிறத்தில், மூக்கின் பருமனில் சிறு சிறு வேறுபாடிருக்கலாம், ஆனால் அடிப்படை அமைப்பு ஒரே வகையானதே. இருபத்தியொராம் நூற்றண்டிலே மனித இனம் பல கிளையினங்களைக் கொண்டதாக வந்துவிடும் என அவர் எதிர்வு சொல்லியிருக்கிறார். எப்படி மனிதன் தன் சுய முயற்சியால் வெவ்வேறு வகை நாய், பூனை இனங்களை உருவாக்கினானோ அதேபோன்று மனித இனமும் பல இனங்களைக் கொண்டதாக மாறிவிடும் என்றிருக்கிறார் நொஸ்றாடேமஸ். நானூறு வருங்களுக்கு முன்னர் கிறுக்கன் என்ற சமூகம் இன்று இவரை மேதை எனவும் யோகி எனவும் புகழ்கிறது. நானூறு வருடங்களுக்கு முன்னர் பிறப்புரிமைப் பொறியில் (Genetical Engineering) பற்றி எவன் சிந்தித்திருக்கிறான்?
இப்போ விவசாயத்துறையிலே தாவர விருத்தி (Plant breeding), மிருக வளர்ப்பு (Animal husbandary) எல்லாவற்றிலும் பிறப்புரிமைப் பொறியியல் கையாளப்படுகிறது. அடுத்த கட்டம் மனித சமூகத்திலும் பிறப்புரிமைப் பொறியியல் கையாளாப்படும். ஆனால் நொஸ்றாடேமஸ் ஒரு ஆச்சரியமான தவலையும் தருகிறார். மனிதத் தலையடன் மீன்போன்ற உடலமைப்போடு செதில்களால் மூடப்பட்ட உடலமைப்புடையநொஸ்றாடேமஸ் நீரிலே வாழும் தன்மையுடைய மனித இனம் (Aqua- Humans)ஒன்று தோன்றும் என்றிருக்கிறார்

- 'திறவுகோல்' பொ. கனகசபாபதி  சேமமடு பதிப்பகம் (பக்ககங்கள் 46- 47)

No comments:

Post a Comment