Sunday 24 May 2009

அறிவுச் சரம் - 1 கூச்சமும் அச்சமும்

சபைக் கூச்சமும் சமூக அச்சமும்

- க.அருள்மொழி

கூச்சம் என்பது பயம் என்ற மனவெழுச்சியின் (Emotion) ஆரம்ப நிலையாகும். ஒரு சிலர் மேடையேறிப் பேச ஆரம்பத்தில் பயப்-படுவார்கள். இது சபைக் கூச்சம் எனப்படு-கிறது. சிலர் நம்மைப் புகழும் போது ஏற்படும் உணர்வும் கூச்சம்தான். புதுமணப் பெண்-ணோ, மணமகனோ நண்பர்களாக கிண்டல் செய்யப்படும்போது கூச்சத்தால் நெளிவார்கள். புதிய நபர்கள் அறிமுகமாகி பழகும்வரை சற்று கூச்சம் ஏற்படுவதுண்டு. இதெல்லாம் தற்காலிகம்தான்.

சிலர் சமூகத்தில் இயல்பாக ஊடாடு-வதற்கே கூச்சப்படுவார்கள். வாய்விட்டு, மனம்விட்டு பேச மாட்டார்கள். யாருடனும் அறிமுகம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆயிரம் பேர் கூடியிருந்தாலும் அந்த இடத்தில் தனியாக இருப்பார்கள் இது சமூக அச்சம் (Social Phobia) எனப்படும்.

பொதுவாக எல்லோருமே ஏதாவது ஒருவகை அச்சத்திற்கு ஆளாவதுண்டு. உயரமான இடம், பாம்பு, கரப்-பான் பூச்சிக்கு பயப்படுபவர்கள் உண்டு. தனியாக இருக்க பயப்படுவது அனேகம் பேருக்கு இயல்பு. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்து இருக்க பயப்படுவது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

சமூக அச்சம் உள்ளவர்கள் கூட்டத்தைப் பார்த்தாலே பதட்டப்படுவார்கள். தான் அங்கு சென்றால் குழப்பம் என்று நினைத்துத் தவிப்பார்கள். இதனால் மற்றவர்களுடன் பேசிப் பழகி அனுபவிக்கும் மகிழ்ச்சியை இழந்து விடுகிறார்கள்.

பொதுவான சமூக அச்சம்: எல்லோரும் தன்னையே பார்ப்பதாகவும் தன்னுடைய செயலையே உற்று நோக்குவதாகவும் நினைக்கிறார்கள். அடுத்தவர்களுடன் அறிமுகம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். கடைகளுக்கு, உணவகங்களுக்குச் செல்லவும் பயப்படுகிறார்கள்.

பொது இடங்களில் உண்ணவோ அருந்தவோ கவலை கொள்கிறார்கள். பொது இடங்களில் குழப்பமாக உணர்கிறார்கள். மற்றவர்களுடன் உறுதியான நட்புடன் இருப்பதில்லை. இதுபோன்ற குணங்களைக் கொண்டவர்களை பொதுவான சமூக அச்சம் (General Social Phobia)கொண்டவர்கள் எனலாம்.

மேலும் மணவிழாக்கள், தன் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் கூட தனித்து சென்றுவிடவே முயல்வர். கலந்து கொள்ள இயலாத நிலை தனக்கிருப்பதாக நினைத்துக் கொள்-வர். சிலர் தனிமைச் சிறையில் அடைத்துக் கொள்ளும் நிலைக்கும் சென்றுவிடுவர். மது விருந்து போன்ற-வற்றிற்குச் செல்ல வேண்டியிருப்-பவர்கள் முன்கூட்டியே மதுவருந்தி விட்டு செல்வதால் சற்று கலந்து பழகும் உணர்வைப் பெறுகின்றனர்.

குறிப்பிட்ட சமூக அச்சம்: ஒவ்வொருவர் செய்யும் தொழிலுக்கேற்ப சில நேரங்களில் அவர்களை மய்யப்படுத்தி நடக்கும் நிகழ்வுகள் குறிப்பிட்ட சமூக அச்சம் (Specific Social Phobia) உடையவர்களை வெகுவாக பாதிக்கிறது. இந்த வகையினர் சாதாரண நடவடிக்கைகளில் அனைவருடனும் கலந்து பேசு-வார்கள். ஆனால் அவரை மய்யப்படுத்தியோ அல்லது அவர் தலைமையிலோ ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் பதட்டமடைந்து விடுவார். அந்த நேரத்தில் திடீரென்று திக்குவாய் ஏற்படும். அல்லது உறைந்து போனது போலவும் ஆகிவிடுகிறார்கள். தனக்காக ஒரு கேள்வியைக் கேட்டு பதில் பெற வேண்டிய அவசியமுள்ள நிலையிலும்கூட அதைத் தவிர்க்கிறார்கள்.

அச்சத்தால் ஏற்படும் விளைவுகள்: பொதுவான அச்சம் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் அச்சம் எதுவாக இருந்தாலும் பதட்டம் என்பது பொது-வானது. தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொள்-வார்கள். எந்த சமூக நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாத-தால் கவலைபற்றிக் கொள்ளும். எந்த வேலையும் குழப்பத்திலேயே முடியும். தேவையான வேலைகளைக்-கூட செய்ய முடியாது. மற்றவர்களுடன் பழக வேண்டிய சூழலில் தவறாக நடந்து கொண்டு-விட்டு பின்னர் நினைத்து நினைத்து வருந்துவர்.

உடல் ரீதியான சில விளைவுகளும் ஏற்படும். அதாவது, வாய் உலர்ந்து போவது, அதிக வியர்வை, இதயம் வேகமாக அடித்துக் கொள்வது, இதயம் தாறுமாறாகத் துடிப்பது, சிறுநீர் கழித்தல், மரத்துப் போதல் அல்லது ஊசியால் குத்தப்படுவதுபோல உணர்தல், வெட்கத்தால் முகம் சிவந்து போதல், நாக்கு குழறல், நடுக்கம் போன்ற அறிகுறிகளைக் காணலாம். இதனால் கவலைப்பட்டு கவலைப்பட்டே முகம் மோசமாக தோற்றமளிக்கும்.

சமூக அச்ச நோய் உள்ளவர்கள், மற்றவர்கள் சாதாரணமாக செய்யும் வேலைகளைக்கூட செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பர். மற்றவர்-களுக்குச் சுமையாக இருப்பதாகவும் உணர்வர். மற்றவர்கள் கண்களுக்கு சோகமாகவும் மன அழுத்த நிலையில் இருப்பதும் எளிதாகத் தெரியும்.

குடும்பத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது இவர்கள் மட்டும் சோக-மாகவே இருப்பார்கள். குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று வரவும் தயங்குவார்கள். மிகப் பெரிய பணமும் அதிகாரமும் வரக்கூடிய பணிகளை தவிர்த்து விடுவர். நீண்டகால நட்புறவு என்பதே இவர்களுக்குக் கிடைக்காது.

நூற்றில் அய்ந்து பேர் ஓரளவு சமூக அச்சத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் சற்று கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள்.

மன அழுத்தம் என்பது சமூக அச்ச நோயின் தொடர் விளைவாகும். தொடர்ந்து, கூட்டமான இடத்தை தவிர்த்து வருவதும் தனிமையைத் தேடுவதும் வெளியில் செல்லவே பயம் (agora Phobia) என்ற நோயையும் ஏற்படுத்தும், போதைக்கு அடிமையாக நேரிடும். மற்ற நபர்களைவிட மாரடைப்பு ஆபத்து அதிகம்.

இந்நோய் ஏற்படக் காரணங்கள்: திட்ட-வட்டமாக காரணம் எதுவும் சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும், மூன்று வயது முதல் ஏழு வயதிற்குள் ஏற்படும் கூச்ச நிலையைப் போக்க பழக்கப்-படுத்தாதவர்களுக்கும் பொது இடங்களில் அதிகபட்ச நாகரீக தரத்துடன் நடந்து கொள்ள முடியாது என்று நினைப்பவர்-களுக்கும் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்-படுகிறது.

தான் மிகவும் கட்டுப்பாடு உள்ளவன்/உள்ளவன் என்று நினைப்பவர்களுக்கும், தான் மற்றவர்களுக்கு சலிப்பைத் தருபவர் (Boring) என்று நினைப்பவர்களுக்கும் பொது இடத்தில் கலந்து கொண்டால் தன் அறியாமை வெளிப்பட்டு விடும் ன்று நினைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

தீர்வுகள்: சமூக அச்ச நோயின் முதற்கட்டம் கூச்ச சுபாவம். அந்த நிலையிலேயே மணவளப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். மனத்தணிப்பு (Mind Relaseing) பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தன்னைப்பற்றி கொண்டுள்ள தவறான எண்ணங்களை ஒருதாளில் எழுதிப் பார்த்து கிழத்தெறிய வேண்டும். இதனால் மனதிலுள்ள தவறான எண்ணங்கள் மறையும்.

மற்றவர்களைத் தவிர்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே, கவலை தருவதாக நினைக்கும் சூழ்நிலைகளைக் கையாண்டு என்ன ஆனாலும் கடைசிவரை முயற்சி செய்வோம் என்று நினைத்து தொடங்க வேண்டும்.

உளவியல் மருத்துவம்: சமூகத் திறன் (Social Skills) பயிற்சிகள்மூலம் புதியவர்களுடன் எப்படி உரையாடலைத் துவங்குவது, எப்படி நடப்பது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. பலருடன் கலந்து பழகும் பயிற்சியை படப்பதிவு செய்து ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள். எப்படித் தோற்றம் அளிக்-கிறார்கள். என்ன கருத்தை வெளிப்படுத்து-கிறார்கள் என்று தெரிந்து கொண்டு நடத்தை மாற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒருவரை அச்சுறுத்தும் சூழ்நிலைகளைப் பட்டியலிட்டு மிக அதிக பயமளிக்கும் சூழல் முதல் குறைவாக பயமுறுத்தும் சூழல் வரை வரிசைப்படுத்தப்படுகிறது. சிகிச்சையளிப்-பவரின் உதவியுடன் குறைவான பயச்சூழலி-லிருந்து ஆரம்பித்துப் படிப்படியாக ஒவ்வொரு சூழலையும் கையாளக் கற்றுக்-கொடுக்கப்படுகிறது.

எண்ணம் மாற்றும் சிகிச்சை: சமூக அச்சம், தன்னைப் பற்றி தானே கொண்டுள்ள தவறான எண்ணங்களால் வருகிறது. இதனை மாற்ற, தேவையற்ற கட்டுப்பாடு, கற்பனை ஆகியவற்றையும் தற்காப்பு நடவடிக்கைகளையும் பற்றிய விழிப்புணர்வை அளிக்கிறார்கள். மேலும் தேவைப்பட்டால் மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

"அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா - ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்ற பாடல் போர்க்களத்திலும், சொற்போர் களத்திலும் நெஞ்சு நிமிர்த்திச் செல்ல நம்பிக்கையைத் தரக்கூடியது.

நன்றி: உண்மை மே 2009 -

http://files.periyar.org.in/unmaionline/2009/may/01-15_2009/page14.php?0945-560_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_0000-1100_01-15_2009

No comments:

Post a Comment