Friday 24 April 2009

சரம் -1 கருணாநிதியின் பந்து!!

கருணாநிதியின் பந்து!!
பாரீசு
-இப்போது நம்மவர்கள் சந்திக்கும்போதெல்லாம் பேசு பொருளாவது 'வன்னி நிலவரம்'தான். இதனுடன் கூடவே அலசப்படுவது தமிழ்நாட்டு நிலவரம். தமிழ்நாட்டையும் தமிழக அரசையும் ஏக்கத்துடன் பார்த்திருந்து பெருமூச்செறிந்தவர்கள் இந்த ஈழத் தமிழர்கள்.
தேவைக்குதவாத உறவு தேவையற்றதாகிவிடும். இதைச் செவ்வனே நிறைவேற்றிய திருமகன் மாண்பு மிகு உலகத்தமிழ்த்தலைவனாக தம்பட்டமிட்ட கருணாநிதி அவர்கள்தான்.
நாங்களெல்லோருமே திரையிலும், மேடையிலும் நடிகர்களைக் கண்டு இரசித்தவர்கள். ஆனால் தன் வாழ்வையே முழுமையான நடிப்பாற்றலால் அசத்திய பெரு நடிகனாக விளங்கியவர் கருணாநிதி அவர்கள்தான். இவரது இயல்பான நடிப்பாற்றலை அரங்கிலாமல் வெளிப்படுத்தியது இந்த ஈழப்போராட்டம்தான்.
முகமூடி கழன்ற நிலையிலும் சளைக்காமல் இவரால் நடாத்தப்பட்ட பந்து இன்று பாரீசிலும் கதைக்கப்பட்டது. பதிவர்களின் பல்வேறு கருத்தகளால் உந்தப்பட்டிருந்தார்கள் வாசகர்கள்.
'இவ்வளவு ஈழத்தமிழர்கள் சாவடையவும் அங்கவீனராகவும் துன்புறும்போது இந்தக் கருணாநிதியால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிகிறது?' என்கிறார் கொஞ்சம் வயதானவர்.
'அதுதானே!' ஆச்சரியம் கூட வந்தவருக்கு.
'நாடே எரியும் போது பிடில் வாசித்தவனும் இருக்கிறான்தானே!' என்றார் இன்னுமொருவர்.
'இந்தக் கருணாநிதியால் இந்தத் தள்ளாத வயதில் எப்படி எம்மவர்களின் அவலச் செய்திகளைத் தாங்கிக் கொள்ள முடிகிறதோ?' இது இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணுடையது.
இதுவரையில் பேசாதிருந்த இளைஞன் 'அந்த மனுசனுக்கு எங்கே இருக்கிறது இதயம்!' என்றான் படபடப்புடன்.
வாயடைத்துப்போனோம்.
-சந்திரன்

No comments:

Post a Comment