Friday 4 July 2014

இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சியாகிறது « மாறு தடம் » சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் திரை

சலனச் சரம் 9

இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சியாகிறது

புலம்பெயர் தமிழர்களின் திரைக் கலை வெளிப்பாடக அமையும்
சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட

« மாறு தடம் »

(2013 – சுவிற்சர்லாந்து - 150 நிமிட முழு நீளத் திரைப்படம்)




கோடம்பாக்க கனவுத் தொழிற்சாலையின் உற்பத்திகளில் ஐரோப்பிய அழகுக் காட்சிகளாக பெருமிதத்துடன் இடம்பெறும் நாடு சுவிற்சர்லாந்து. இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பனிமலைகளின் நகரங்களில் அவ்வப்போது வந்துபோகும் நாயக – நாயகிகளின் துண்டுக் காட்சிகளையே பிரமாதமாக விளம்பரப்படுத்துவதையும் இவற்றுக்காகப் பெரும் பொருட் செலவைச் செய்ததாக பீற்றிக் கொள்ளும் கொலிவூட் திரையுலகை நாம் நன்கு அறிவோம். அப்போது ஈழத்தின் கடைக் கோடிக் கிராமங்களில் வெண்திரைகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த முதற் தலைமுறையினரின் கண் முன்னாலேயே இத்தகைய கனவு தேசங்களில் நம்மவர்களது கால்கள் நடமாடுவதையும், சரளமான குடும்ப மற்றும் நட்புச் சுற்றுலாக்கள் நிகழ்வதையும், நமக்கான கலைவெளிப்படுத்துகைகள் நிகழ்த்தப்படுவதையும், இவற்றின் அடுத்த படியாக இத்தேசங்கள் தழுவிய முழுமையான திரைப்படங்கள் தயாராவதையும் காணும்போது எல்லாமே நிசந்தானாவென கைகளைக் கிள்ளிப் பார்க்க வைக்கின்றன.
காலச் சக்கரத்தின் கோரச் சுழற்றுகையால் பூமிப் பந்தெங்கிலும் விரவியவர்களாகிய ஈழத் தமிழர்களது வேர்கள் உலகின் பல பாகங்களிலும் ஊன்றியதாகி, பகீரதப் பிரயத்தனத்துடன் கிளை பரப்பும் விருட்சங்களாகி அவை பரவும் விழுதுகளாக ‘புலம்பெயர் தமிழர்’ எனும் புதிய அடையாளத் தடமாகவும் ஆகிவிட்டன. நீண்டு செல்லும் புலப்பெயர்வு வாழ்வில் தாங்கள் ஊன்றப்பட்ட மண்ணில் எமக்கான கலைவெளிப்பாடுகளுடன் தலைநிமிர்கிறது நம் கலைப் படைப்புகள்.
 00000 000000 000000

அன்றைய ஈழத்தமிழர்களின் ஒரு பகுதியினர் இன்றைய புலம்பெயர் தமிழர்களாக சுவிற்சர்லாந்து நாட்டில் படர விழையும் வேரும் விழுதுமான வாழ்வின் தடம் « மாறு தடம் » முழுமையான திரைத் தயாரிப்பையும் நிகழ்த்தி ஒளிக் காட்சியாகியிருக்கிறது.
ஐரோப்பிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் வாழ்வின் நீட்சியில் வெளிவந்திருக்கிறது « மாறு தடம் »(2013 -சுவிற்சர்லாந்து) எனும் முழு நீளச் சினிமா. சுவிற்சர்லாந்து தேசத்தில் குடியேறிய முதற் தலைமுறையினருடன் இவர்களது வாரிசுகளுடனான தலைமுறையினரும் 25 வருடங்களின் பின்னரான புகலிடக் கோரிக்கைகளுடன் வந்தேறிய அடுத்த தலைமுறையினருமாகச் சங்கமிக்கும் முக்கியமானதொரு காலகட்டத்தை மையமிடுகிறது ‘மாறு தடம்’. இதனை அகன்ற திரையில் படரச் செய்திருக்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குனர் கலைவளரி சக.ரமணா என்று அழைக்கப்படும் ரமணதாஸ்.
இவர் கலை ஆர்வலராக, கலை ஈடுபாட்டாளராக, அரங்கவியலாளராக, பல்வேறு தமிழ் நிகழ்கலை ஆற்றுநராக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு கலைஞர். முறையான நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கும் இவர், அஜீத் நடித்த அசல் படம் உட்பட,  சில  தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்தும், வேறு சில படங்களின் தயாரிப்புப் பணிகளிலும் பங்கு கொண்டிருப்பவர்.


புலம் பெயர் அரங்கவியலாளனாகிய ரமணதாஸ் புதிய விஞ்ஞானத் தொழிநுட்ப கலைப் பரிமாணமாகிய குறும்பட மற்றும் முழு நீளத் திரைப்பட முயற்சிகள் பலவற்றிலும் முன்னின்று உழைப்பவர். சுவிற்சர்லாந்தில் முதன் முறையாகத் தயாரிக்கப்பட்ட முழு நீளத்(90 நிமிட) திரைப்படமான « பூப்பெய்த்தும் காலம் »  திரைப்படத்தின் இயக்குனர்.
இரண்டரை வருடங்களாக சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட இந்த இரண்டரை மணிநேரத் திரைப்படம், சென்ற 2013 மார்ச்சு மாதத்தில்  சுவிற்சர்லாந்தின் ஐந்து மாநிலங்களின் மத்தியிலமைந்துள்ள அகன்ற திரையரங்குகளில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டது. தொடர்ந்து பிரான்சிலும் – வடதுருவ நாடுகளான நோர்வே, பின்லாந்திலும் மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இலங்கையின் பல்வேறு நகரங்களில் தமது பூர்வீகத் தொப்புக்கொடி உறவுகளுடனான பார்வையிடலுக்குச் செல்கிறது. இந்த வருடம் 2014 யூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்டு முதல் வாரம் வரையில் இத்திரையிடல் இடம்பெறுமென இதன் தயாரிப்பாளர்கள் பேருவகையுடன் தெரிவித்தனர். அங்கு இப்படத்தைப் பார்வையிட்டு வெளிப்படுத்தப்படும் எண்ணக் கருத்துகளை அறிய இவர்களும் கூட ஆவலுடன் வருகிறார்கள். இதற்கான தார்மீக ஒத்துழைப்புகளை பத்திரிகையாளர்களும், தன்னார்வச் சமூகவியலாளர்களும், கலையார்வலர்களும் மேற்கொள்வார்களெனப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் இத்திரைப்படக் குழுமத்தினர்.





0000 00000 00000


'மாறுதடம்' திரையில் இடம்பெற்ற பாடல்



ï      'மாறுதடம்' திரைப்படத்தில் தடம் பதித்துள்ள கலைஞர்கள் :  
ï      சுவிஸ் கலைஞர்கள் : ரமணா, மீனாபிரகாஷ், அனுசாந், விதுசன், விஷ்ணி, கஜன், சாய்ராஜ், கீதா, சுகிர்தா, யசோ, முரளி, இந்துசன், தனுஜன், விஜயன், பாஸ்கர், அனுக்ஷன், சஞ்சி, நிசிதன், சிவசங்கரன், தயா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, சுகந்தி, ஓவியன், விவேதா, விவேகா, இனியன், ஸ்ரெபானி, சிமோனெ, மச்சி பாலா, ரஞ்சினி, சுந்தரம், தர்சிகா,சுவேரா, நிவேதா, சுருதிகா, சிந்துயா, லக்ஷன், ரவி, அருண், பிரா, அஜித், கௌசி, லோகதாசன்.
ï      இலங்கை யாழ்ப்பாண கலைஞர்கள் : பெர்மினஸ், கொலின் (திருமறைக் கலா மன்றம்), மனோரஞ்சினி, வி.ரி. அரசு, நிந்துஜா, அன்றூ, ஜசீதரன், கலைதாசன், துர்க்கா, மதுஷா, யுகன், பவிசரணி, கோபிதர்சன், தரிசனன்.
ï     பாரிஸ் கலைஞர் : ஏ. ரகுநாதன், மற்றும் பலர் 
இசை : வா. யதுர்சன் (சுவிஸ்), மு. உதயன் (சுவிஸ்)
ஒளித்தொகுப்பு : கிருபா (சுவிஸ்), யசீதரன் (யாழ்ப்பாணம்)
பிரத்தியேக சத்தம் : டனா (நித்தி விஷன் யாழ்ப்பாணம்)
டி.ரி.எஸ் (D.T.S.) : ஸ்டார் ஸ்டுடியோ (சாலிகிராமம் சென்னை)
கிராபிக்ஸ் & டிசைன் : விஜிதன் சொக்கா (பாரிஸ்), ராகவன் (கோடம்பாக்கம் சென்னை)
வண்ணக்கலவை : பிக்ஷல் ஷேக் (கோடம்பாக்கம் சென்னை)
ஒப்பனை : தயா லோகதாசன் (சுவிஸ்), அன்றூ (யாழ்ப்பாணம்)
இணைக் கதை : பாலகிருஷ்ணன்
ஒளிதொகுப்புத் தயாரிப்பு : விஷ்னி சினி ஆர்ட்ஸ்

ï      தயாரிப்பு : ஓசை பிலிம்ஸ்
கதை, எழுத்து, படத்தொகுப்பு, பாடல்கள், ஆக்கம்
 
: கலைவளரி சக. ரமணா (ரமணதாஸ்)
0000 00000 00000

அதிகமாக பெண்கள் ஈடுபாட்டோடு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் தமக்கேயுரியதான சிறப்புகளுடனும் உடல் மொழி இலாவகத்துடனும் திரை வழியில் சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள். 
இப்படத்தின் காட்சிகள் இலங்கையிலும் சுவிஸிலுமாக அதிகவளவான பாத்திரங்களுடன் கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் நேர மற்றும் பொருட் செலவைச் செய்திருக்கும் திரைப்படம். புலம்பெயர்வு ஈழத் தமிழ் நிகழ்கலை அரங்கியலாளனாகிய ரமணனின் இயக்கத்தில் வெளியானதொரு குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் இது.
இவருடன் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தலைமுறை இடைவெளி இல்லாது இயல்பாக நடிப்பதை இப்படம் தனித்துவ முத்திரையாய்ப் பதிக்கிறது. இத்தகைய பாத்திரப் பாங்காக வடிவங்களாக திரையில் வலம்வர வைத்துள்ளார் ஒப்பனைக் கலைஞனும் கலை இயக்குநருமான தயா லோகதாசன். தனது தனித்துவ கலை ஆர்வத்துடன் நிகழ்த்திய ஒப்பனைக் கலை - இயக்கம் மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. 

திரையில் வெளிப்படும் பிம்பங்களை மட்டுமே இரசித்துக் கிறங்கிப் போன சமூகத்தின் இரசனை தற்போது திரையிடல்களுக்குப் பின்னாலான கடின உழைப்புகளை இரசிக்கும் நுண் இரசனையாகி வளர்ந்துள்ள புதிய காலகட்டத்தில் ‘ஒப்பனை அழகியல்’ பற்றிப் பதிவிடாது கடக்க முடியாது.

பல்வேறு தம் வாழ்வுக்கான பணிகளுடன் தமது சுயவிருப்பில் அமெச்சூர் கலைப் பங்கேற்பாளர்களாக இணைந்து கலைவெளிப்பாடுகளைக் கொணரும் இத்தகைய கலைஞர்களை நாம் சமூக அக்கறையுடன் வரவேற்க வேண்டும். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தப்படும் கலை வெளிப்பாடுகளை பரவலாக்கி ஊக்கப்படுத்த வேண்டும். நம் ஆற்றலாளர்கள் கவனங்கொள்ளப்படாது  அலட்சியப்படுத்தப்படுமானால் புலம்பெயர்வு தமிழ்ச் சமூகம் என்னும் வரைபுத் தளம் தள்ளாடியே அசைவுறும். உலக வாழ்வோட்டத்தில் தனக்கானதொரு கலையைக் காவிச் செல்லாத சமூகம் முழுமையடையாது.
திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள்- செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும்- தனவந்தர்களும்- முதலீட்டார்களும்- ஊடகங்களும் கவனம் கொள்ள வேண்டிய தருணமிது.

ஈழத்தமிழரின் புலம்பெயர்வு வாழ்வில் சுமார் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கும் திரைப்படமாக்கி 'எம்மால் முடியும்' என்பதாக நிலைநாட்டியுள்ளார்கள் சுவிஸ் வாழ் அடுத்த தலைமுறை இளம் கலைஞர்கள். இத்தகைய கூட்டான உழைப்பை இப்படக் குழுவினர் நிகழ்த்திக் காடடியதை மனமாரப் பாராட்டியே ஆகவேண்டும். உடல் மொழியாகப் பதிவாகும் சட்டகக் காணொலித் திரைமொழியில் நிறையவே ஆண், பெண், இளைஞர், சிறார் எனப் பலதரப்பட்ட நடிகர்கள் கலைஞர்களாகக் கவனத்தைப் பெற்றார்கள். ஒப்பனை ஒளிப்பதிவு தொழில்நுட்பம் இசை என திரையின் பல்துறை தொழில்நுட்ப ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதிகமாக பெண்கள் ஈடுபாட்டோடு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் தமக்கேயுரியதான சிறப்புகளுடனும் உடல் மொழி இலாவகத்துடனும் திரை வழியில் கவனம் பெற்றிருக்கிறார்கள். இதற்காக « மாறு தடம் » சிறப்பான கவனத்தைப் பெறுகிறது.

குறிப்பாக ஈழத் தமிழ் திரைத்துறை ஈடுபாடுகளில் பெண்களது இணைவு என்பது மிகவும் சிரமத்துக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் தற்போது பெண்களது பங்கேற்பும் வெளிப்படுத்துகையும் பல்வேறு அரங்கத் தளங்களில் மிளிர்கின்றன. மாறு தடம் சினிமாவில் காதாநாயகியாகத் தோன்றும் மீனாபிரகாஷ் தனது மிகச் சிறப்பான நடிப்பாற்றலால் தனித்துவமான முத்திரையைப் பதிக்கின்றார். இவர் யாழ் பல்கலைக் கழக நுண்கலைத் துறையில் பட்டம் பெற்றவர், நடன ஆசிரியை,. ஈழத் தமிழர் திரைப் படைப்பாளி ஞானதாஸ் அவர்களது பல்வேறு படங்களில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவர்களது மகளாகத் தோன்றும் செல்வி விஷ்ணி தனக்கான பருவத்துக்கேற்ற பாத்திரத்தில் மிக அழகாக பார்வையாளர்களைக் கவர்கிறார். குழுக்களாக இயங்கும் இளைஞர்களுடன் ஒரு யதார்த்தமான தோழியாக நடிக்கும் சவாலான பாத்திரத்தில் நடிக்கும் செல்வி கீதா புலம்பெயர்வு வாழ்வின் இயல்பான உடல்மொழியில் வெளிப்படுத்தி பார்வையாளர்களை வசீகரிக்ரிக்கிறார். விறுவிறுப்பான காட்சிகளாக இளைஞர்கள் தமது துடிப்பான ஆற்றுகையை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.

இப்படத்தின் காட்சிகள் இலங்கையிலும் சுவிஸிலுமாக அதிகவளவான பாத்திரங்களுடன் கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் நேர மற்றும் பொருட் செலவைச் செய்திருக்கும் என்பதை முதற்பார்வையிலேயே புலப்படுத்துகிறது. புலம்பெயர்வு ஈழத் தமிழ் நிகழ்கலை அரங்கியலாளனாகிய ரமணனின் இயக்கத்தில் வெளியானதொரு குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் இது. இவருடன் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தலைமுறை இடைவெளியில்லாது இயல்பாக நடிப்பதை இப்படம் பதிவிடுகிறது. இந்த வகையில் இப்படம் தனித்துவ முத்திரையைப் பதிக்கிறது.
நம்மவர் திரைத்துறையை மேம்படுத்த, திரையரங்கத்திற்கு குடும்பமாகச் சென்று எமது இளம் கலைஞர்களை ஊக்குவிப்போம்!

ஆற்றலாளர்கள் கவனங்கொள்ளப்படாது  அலட்சியப்படுத்தப்படுமானால் புலம்பெயர்வு தமிழ்ச் சமூகம் என்னும் வரைபுத் தளம் தள்ளாடியே அசைவுறும்.
உலக வாழ்வோட்டத்தில் தனக்கானதொரு கலையைக் காவிச் செல்லாத சமூகம் முழுமையடையாது.






பின்னிணைப்பு:  
1.  Maaru thadam மாறு தடம் : http://www.youtube.com/watch?v=35065QijrBM#t=213


சுவிஸில் இப்படத்தைப் பார்த்தவர்களின் கருத்துத் தொகுப்பு 

2. Osai Films & Vishny Cine Arts presents: Maaru Thadam:
Swiss - Artists: Ramana, Meena, Vithusan, Vishny, Anushanth, Gajan, Geetha, Sairaj, Suki, Balakrishnan, Yaso, Stefanie, Sanji, Anukshan, Krishna, Anusha, Murali, Thanujan, Inthusan, Machi Bala, Simone, Ranjini, Baskar, Vijayan, Varathan, Luxan, Thaya, Nivetha, Nizethan, Viveka, Tharsika, Ovian, Vivetha, Pira, Kausi, Ravi, Ajith, Suganthi, Sinthuja, Shruthika, Swetta, Mathy, Adian, Oovian, Tharsini, Vithusa, Ranji and many more.
Jaffna - Artists: Firminus, Colin, V.T.Arasu, Mano Ranjani, Ninthuja, Mathusa, Thurgga, Kalaithasan, Yugan
France - Artist: A. Ragunathan
Camera: Kiruba, Jasitharan (Jaffna), Yaso, Sanji
Music: Yathushan, Uthayan
Singers: Nerujan, Geetha, Uthayan, Yathushan
Choreography: Gajan Kailasanathan
MakeUp: Thaya Logathasan, Andrew (Jaffna)
Story, Screenplay and Direction: S.K. Ramanathas

3. படக் குழுவினர் விபரம்:
படத்தில் ரமணா, மீனாபிரகாஷ், அனுசாந், விதுசன், விஷ்ணி, கஜன், சாய்ராஜ், கீதா, சுகிர்தா, யசோ, முரளி, இந்துசன், தனுஜன், விஜயன், பாஸ்கர், அனுக்ஷன், சஞ்சி, நிசிதன், சிவசங்கரன், தயா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, சுகந்தி, ஓவியன், விவேதா, விவேகா, இனியன், ஸ்ரெபானி, சிமோனெ, மச்சி பாலா, ரஞ்சினி, சுந்தரம், தர்சிகா, சுவேரா, நிவேதா, சுருதிகா, சிந்துயா, லக்ஷன், ரவி, அருண், பிரா, ஜெனிஸ்ரன், லக்ஷகன், அஜித், கௌசி, லோகதாசன் நடித்துள்ளனர்.
மேலும் பெர்மினஸ், கொலின் (திருமறைக் கலா மன்றம்), மனோரஞ்சினி, வி.ரி.அரசு, நிந்துஜா, அன்றூ, ஜசீதரன், கலைதாசன், துர்க்கா, மதுஷா, யுகன், பவிசரணி, கோபிதர்சன், தரிசனன் இலங்கை யாழ்ப்பாண கலைஞர்களும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாரிஸ் கலைஞர் ஏ.ரகுநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இசை, வா.யதுர்சன்(சுவிஸ்), மு.உதயன் (சுவிஸ்). ஒளித்தொகுப்பு, கிருபா(சுவிஸ்), யசீதரன் (யாழ்ப்பாணம்). பிரத்தியேக சத்தம், டனா (நித்தி விஷன் யாழ்ப்பாணம்), டி.ரி.எஸ்(D.T.S). ஸ்டார் ஸ்டுடியோ (சாலிகிராமம் சென்னை) கிராபிக்ஸ் & டிசைன், விஜிதன் சொக்கா (பாரிஸ்), ராகவன் (கோடம்பாக்கம் சென்னை).வண்ணக்கலவை, பிஷல் ஷேக் (கோடம்பாக்கம் சென்னை). ஒப்பனை, தயா லோகதாசன்(சுவிஸ்), அன்றூ (யாழ்ப்பாணம்). இணைக்கதை, பாலகிருஷ்ணன். ஒளிதொகுப்புத் தயாரிப்பு, விஷ்னி சினி ஆர்ட்ஸ்.தயாரிப்பு,ஓசை பிலிம்ஸ். கதை, எழுத்து, படத்தொகுப்பு, பாடல்கள், ஆக்கம்கலைவளரி சக.ரமணா (ரமணதாஸ்).

4. தொலைக் காட்சி கலந்துரையாடல் :





0000 0000
 திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள்- செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும்- தனவந்தர்களும்- முதலீட்டார்களும்- ஊடகங்களும் கவனம்கொள்ள வேண்டிய தருணமிது.

 - சலனம் முகுந்தன்
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் !
0000 00000
பாரீசு 04.07.2014

4 comments:

  1. சென்ற வருடம் செப்படம்பரில் பாரீசில் இப்படத்தைக் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சென்று பார்த்தோம். நிறைவான படமாகவும் நம்மால் முடியுமென்பதை நிரூபித்ததாகவும் இருந்ததென்பதை மனமாரப் பாராட்டினோம்!
    நிறையப் பாத்திரங்கள் அவரவருக்குரிய பாணிகளில் இயல்பான உடல் மொழி வெளிப்பாட்டை தந்திருந்தார்கள். சிறப்பாக இருந்தது.
    அடுத்த தலைமுறையினரும் நாமுமாக ஒன்றாக இரசித்த நம்மவர்களது திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
    இப்படம் இலங்கையில் திரையிட எடுக்கப்படும் முயற்சியை அறிந்து மிகுந்த மகிழ்வைத் தருகிறது. நாடுகள் விட்டு வேறு நாடுகளில் குடியேறி வாழும்போது எத்தகைய மன உளைச்சல்களுக்கெல்லாம் முகம் கொடுப்பவர்களாகி வாழ்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் புரிய வைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
    திரைப்படக் குழுமத்தினரின் அயராத முயற்சிகளுக்கு எமது பாராட்டுகள்!!

    ReplyDelete
  2. திரைப்படத்தில் நடித்த, பணிபுரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், தங்களை பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி,
    சுரேந்திரன் , குண்டூர்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வலைப்பதிவினுள் வருகை தந்து தங்களது கருத்துகளைப் பதிவிட்ட அருந்தா மற்றும் அண்ணாமலை சுரேந்திரநாத் அவர்களுக்கு நன்றிகள்!!

    ReplyDelete