Wednesday 28 May 2014

ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் - Le messageur de l'hiver (பிரெஞ்சு நூல் வெளியீடு)

செய்திச் சரம் : 24
தகவலகம்

தமிழிலிருந்து பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு:
Le messageur de l'hiver
(ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்)
மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
தெரிவு செய்யப்பட்ட புலம்பெயர் ஈழத்துக் கவிஞன் கிபி அரவிந்தன் கவிதைகளது பிரஞ்சு மொழி பெயர்ப்பு நூல் வெளியீடு
பாரீசு - பிரான்சு
Mardi 3 juin 2014 

à 18 h 30
La Route des Indes

vous invite à la présentation de



Le messager de l’hiver

Riveneuve Editions

Poèmes tamouls sri lankais de Ki. Pi. Aravinthan


Les poèmes seront lus par leur auteur,

et commentés par leur traducteur, Appasamy Murugaiyan


La présentation sera suivie d’un verre

La Route des Indes, 7 rue d'Argenteuil 75001 Paris - Tél. 01 42 60 60 90



Message du 15/05/14 22:43  De : "Paul Paumier"   A : veilleur-INDE@listes.univ-rouen.fr
> Objet : VeillEUR : INDE / Poésie tamoule à La Route des Indes le 3 juin


இந்நூலை  ‘றிவநெவ்’ (RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிடுகிறது. இந்நூலை உலகின் எப்பாகத்திலிருந்தும் இணைய வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதகைள் தமிழிலும் அதன் மொழிபெயர்பாக பிரஞ்சிலும் இடம் பெற்றுள்ளன.
1980களின் பின் இலங்கையின் இனவொடுக்கல் துயரத்தின் சாட்சிகளாக சிதறுண்டு புலம்பெயர் ஈழத் தமிழர்களாகி பல்வேறு நாடுகளில் குடியேறியவர்களது முதற் தலைமுறையினரது படைப்புகள் ஆங்கிலமில்லாது உலகளாவிய மொழிகளில் அவர்களது காலகட்டத்திலேயே மொழிபெயர்ப்பாவது சிறப்பானதொரு தடமிடுதலாகவே கவனம் பெறுகிறது. நூலின் அட்டையை வடிவமைத்திருக்கிறார் ஓவியர் மருது.
La Route des Indes, 7 rue d'Argenteuil 75001 Paris 
நேரம்: மாலை 18மணி 30 நிமிடம்
03.06.2014
வருகை தரும் வாசகர்கள் ஆர்வலர்களுடன் இந்நூலின் படைப்பாளிகள் புலம்பெயர் நாட்டு பண்பாட்டு விருந்தோம்பல்களுடன் மனந்திறந்து உரையாடுவர்.
அனைவரும் வருக!

00000

கி. பி. அரவிந்தன் (பிறப்பு: 1953, நெடுந்தீவு, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார் அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்திவருகின்றார்.
1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறினார். 1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
நன்றி : விக்கிபீடியா:

அப்பாசாமி முருகையன் : பாரீசு பல்கலைக் கழகத்தில் மொழியில் துறையில் பணியாற்றுபவர். தமிழ்த்துறை விரிவரையாளர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தன் துறைசார் ஆய்வுகளுக்காக பல்வேறு நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்பவர்.
Appasamy Murugaiyan Epigraphy Video 2013

பிற்குறிப்பு : இந்நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28.06.2014 அன்று பாரீசு 8 பல்கலைக் கழகத்தில் நடைபெற ஏற்பாடாகி வருகிறது.
-முகிலன்
பாரீசு 28.05.2014

No comments:

Post a Comment