Tuesday 8 December 2009

செய்திச் சரம் - 7 நோர்வே ஒஸ்லோ நகரில் “ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு

செய்திச் சரம் 7
“ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு
ஈழத்தமிழர் பரவிவாழும் உலக நகரங்களில் ஒன்றான ஒஸ்லோவில் 13.12.2009 ஞாயிறன்று நடைபெறவுள்ளது
TAMIL DRAMA IN CEYLON AND MY PART IN IT
By Kalai Arasu K.CHORNALINGAM




"ஈழத்தில் நாடகமும் நானும்” கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்களாள் எழுதப்பட்டு 1968 ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலை ”ஈழவர் திரைக்கலை மன்றம்” மறுபதிப்பு செய்து 13.12.2009 ஞாயிற்றுக்கிழமை Veitvet skole மண்டபத்தில் (Veitvetveien 17, 0596 Oslo) 17.30 மணிமுதல் 18.30 மணிவரை நோர்வே தமிழ் பிச்சர்(nt picture), சலங்கை நர்த்தனாலய ஆதரவுடன் இந்நூலை வெளியிடவுள்ளது.


பிரதம விருந்தினராக இந்நூலின் மறுபதிப்பில் முக்கிய பங்காற்றிய 'ஈழவர் திரைக்கலை மன்றம்' இன் தலைவரான பரீஸ்ரர் எஸ். ஜே. ஜோசெப் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். நம்மவர் கலையில் ஆர்வமுடையவர்களை அன்புடன் அழைக்கின்றனர் அழைப்பாளர்கள்.


இந்நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களிலும் நடக்கவுள்ளதென்பது முன்னரே அறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.


மேலதிக விபரங்கள்:
www.ntpicture.com/index.php?option=com_content&task=view&id=231

தகவல்: மூத்த நடிகரும் இந்நூலாக்க மறுபதிப்பாக்கத்தில் முன்னின்றவருமான திரு ஏ. ரகுநாதன் அவர்கள்.

No comments:

Post a Comment