Monday 30 November 2009

செய்திச் சரம் 6 பாரீசில் நல்லூர்ஸ்தான் நடாத்தும் 4வது குறும்படப் போட்டி


செய்திச் சரம் 6

பாரீசில் நல்லூர்ஸ்தான் நடாத்தும் 4வது குறும்படப்போட்டி 2009
பணப் பரிசில்களை வெல்லப்போகும் 'சங்கிலியன் விருது 4' இற்கான குறும்படங்கள் எவை?

இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 13-ம் நாளன்று நல்லூர்ஸ்தான் பண்பாடும் விளையாட்டும் அமைப்பு நாடத்தும் 'சங்கிலியன் விருது 4' குறும்படப் போட்டி நடக்கவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க சுமார் 18 குறும்படங்கள் உலகெங்கிலும் இருந்து வந்துள்ளவென்றும் முதல் நாள் (டிசெம்பர் 12) நடுவர்களின் தீர்ப்புக்கமைவாக இறுதிச் சுற்றுக்குத் தெரிவான குறும்படங்கள் இந்நாளன்று பொதுப் பார்வையாளர்களுக்குப் காண்பிக்கப்படுவதுடன் பரிசுபெற்றவருக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இதன் அமைப்பாளரான திரு குணா அவர்கள் தெரிவித்தார்கள்.
இப்போட்டியில் நடுவராகக் கலந்து சிறப்பிக்க முக்கியமான திரை ஆர்வலர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் சமூகத்தில் குறும்பட ஊக்குவிப்புக்காக நாடத்தப்படும் 'சங்கிலியன் விருது' நிகழ்வு சிறந்த குறும்படங்களுக்கான பட்டையங்களுடன் முதல் பரிசாக 1500 ஈரோக்களையும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களையும் மூன்றாவது பரிசாக 500 ஈரோக்களையும் வழங்கிவருவதென்பது குறிப்பிட வேண்டியதொன்றாகும்.
இம்முறை நான்காவது தடவையாக நடைபெறவுள்ள இந்நிகழ்வு பாரீஸ் வாழ் பொதுப் பார்வையாளர்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்: முகிலன்
பாரீஸ் நவம்பர் 2009

No comments:

Post a Comment