Tuesday 14 January 2014

இனிய தைப்பொங்கல் - 2014 புத்தாண்டு - தமிழர் திருநாள் வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!!

வாழ்க! வளமுடன்!!




தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. 
இதுவரையில் இந்நாள்; வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருந்தபோதிலும், இது தற்போது தமிழர் நாளாக- தமிழரின் அடையாள நாளாக - ‘தமிழர் திருநாளாக’ - தற்போது புதிய வாழ்வியல் சூழலுக்கு அமைவாக பரிணாமடைந்து வருகிறது. இதற்கமைவாக எம்மாலான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வரங்கம் 19.01.2014

Le 19. 01. 2014 * 11h30 - 18h30
Salle Jeanne d'Arc, 50 rue Torcy, 75018 Paris. 
M°12 Marx Dormoy 

தொடர்பான பதிவு: 

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வரங்கம் 19.01.2014

முகிலன்
பாரீசு 14.01.2014

1 comment:

  1. நன்றிகள். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!!

    ReplyDelete