Thursday 21 January 2010

பாரீசில், கலையரசு சொர்ணலிஙகம் -நூல் அறிமுகமும், கலையரசு விருது 2009 வழங்கலும்


செய்திச் சரம் - 8
பாரீசில் ஈழவர் திரைக்கலை மன்றம் நடாத்தும்
'ஈழத்தில் நாடகமும் நானும்' நூல் அறிமுகமும் -
சிறந்த கலைஞருக்கான 'கலையரசு விருது2009 வழங்கலும்!

எதிர்வரும் 30.01.2010 சனி பிற்பகல் 6 மணி 30 இற்கு பாரீசு 18 இல் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழக (பாரீசுக் கிளை) மண்டபத்தில் ஈழவர் திரைக் கலை மன்றத்தினரால் கலையரசு சொர்ணலிங்கம் நினைவாக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

இம்முறை பாரீசில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 'ஈழத்தில் நாடகமும் நானும்' நூல் அறிமுக அரங்கமும், ஈழத்துச் சிறந்த கலைப்படைப்பாளிகளைத் தெரிவு செய்து கெளரவிக்கும் கலையரசு விருதாகிய 'கலாவினோதன் 2009' வழங்கல் அரங்கமும் நடைபெறவுள்ளது.

2006 முதல் இதுவரையில், இலண்டனிலும் கொழும்பிலும் நிகழ்ந்த இந்நிகழ்வு இம்முறை பாரீசில் நடாத்தப்படுகிறதெனவும் இதனைத் தொடர்ந்து 'கலாவினோதன் 2010' விருது நிகழ்வு கனடாவிலும் அவுர்திரேலியாவிலும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டார் ஈழவர் திரைக்கலை மன்றத் தலைவர் பாரீஸ்டர் யோசெப் அவர்கள்.

பாரீசு நிகழ்வில் இம் முறை 'கலாவினோதன் 2009' கெளரவிப்பைப் பெறுகிறார் நீண்ட காலமாக கலைப்படைப்பாற்றலை வெளிப்படுத்திவரும் பல்துறைக் கலைஞன் திரு பரா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார் அமைப்பாளர்களில் ஒருவரும் நம் மூத்த கலைஞனுமாகிய ஏ. ரகுநாதன் அவர்கள் அனைவரையம் அன்புடன் அழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

காலம் : 30.01.2010 சனி மாலை 18 மணி 30 நிமிடம்
இடம் : 70 Rue Phillippe de Gerard, 75018 Paris

தகவல் : முகிலன்

பிரான்சு 20. 01. 2010

No comments:

Post a Comment