Showing posts with label சலனச் சரம். Show all posts
Showing posts with label சலனச் சரம். Show all posts

Friday, 4 July 2014

இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சியாகிறது « மாறு தடம் » சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் திரை

சலனச் சரம் 9

இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சியாகிறது

புலம்பெயர் தமிழர்களின் திரைக் கலை வெளிப்பாடக அமையும்
சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட

« மாறு தடம் »

(2013 – சுவிற்சர்லாந்து - 150 நிமிட முழு நீளத் திரைப்படம்)




கோடம்பாக்க கனவுத் தொழிற்சாலையின் உற்பத்திகளில் ஐரோப்பிய அழகுக் காட்சிகளாக பெருமிதத்துடன் இடம்பெறும் நாடு சுவிற்சர்லாந்து. இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பனிமலைகளின் நகரங்களில் அவ்வப்போது வந்துபோகும் நாயக – நாயகிகளின் துண்டுக் காட்சிகளையே பிரமாதமாக விளம்பரப்படுத்துவதையும் இவற்றுக்காகப் பெரும் பொருட் செலவைச் செய்ததாக பீற்றிக் கொள்ளும் கொலிவூட் திரையுலகை நாம் நன்கு அறிவோம். அப்போது ஈழத்தின் கடைக் கோடிக் கிராமங்களில் வெண்திரைகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த முதற் தலைமுறையினரின் கண் முன்னாலேயே இத்தகைய கனவு தேசங்களில் நம்மவர்களது கால்கள் நடமாடுவதையும், சரளமான குடும்ப மற்றும் நட்புச் சுற்றுலாக்கள் நிகழ்வதையும், நமக்கான கலைவெளிப்படுத்துகைகள் நிகழ்த்தப்படுவதையும், இவற்றின் அடுத்த படியாக இத்தேசங்கள் தழுவிய முழுமையான திரைப்படங்கள் தயாராவதையும் காணும்போது எல்லாமே நிசந்தானாவென கைகளைக் கிள்ளிப் பார்க்க வைக்கின்றன.
காலச் சக்கரத்தின் கோரச் சுழற்றுகையால் பூமிப் பந்தெங்கிலும் விரவியவர்களாகிய ஈழத் தமிழர்களது வேர்கள் உலகின் பல பாகங்களிலும் ஊன்றியதாகி, பகீரதப் பிரயத்தனத்துடன் கிளை பரப்பும் விருட்சங்களாகி அவை பரவும் விழுதுகளாக ‘புலம்பெயர் தமிழர்’ எனும் புதிய அடையாளத் தடமாகவும் ஆகிவிட்டன. நீண்டு செல்லும் புலப்பெயர்வு வாழ்வில் தாங்கள் ஊன்றப்பட்ட மண்ணில் எமக்கான கலைவெளிப்பாடுகளுடன் தலைநிமிர்கிறது நம் கலைப் படைப்புகள்.
 00000 000000 000000

அன்றைய ஈழத்தமிழர்களின் ஒரு பகுதியினர் இன்றைய புலம்பெயர் தமிழர்களாக சுவிற்சர்லாந்து நாட்டில் படர விழையும் வேரும் விழுதுமான வாழ்வின் தடம் « மாறு தடம் » முழுமையான திரைத் தயாரிப்பையும் நிகழ்த்தி ஒளிக் காட்சியாகியிருக்கிறது.
ஐரோப்பிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் வாழ்வின் நீட்சியில் வெளிவந்திருக்கிறது « மாறு தடம் »(2013 -சுவிற்சர்லாந்து) எனும் முழு நீளச் சினிமா. சுவிற்சர்லாந்து தேசத்தில் குடியேறிய முதற் தலைமுறையினருடன் இவர்களது வாரிசுகளுடனான தலைமுறையினரும் 25 வருடங்களின் பின்னரான புகலிடக் கோரிக்கைகளுடன் வந்தேறிய அடுத்த தலைமுறையினருமாகச் சங்கமிக்கும் முக்கியமானதொரு காலகட்டத்தை மையமிடுகிறது ‘மாறு தடம்’. இதனை அகன்ற திரையில் படரச் செய்திருக்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குனர் கலைவளரி சக.ரமணா என்று அழைக்கப்படும் ரமணதாஸ்.
இவர் கலை ஆர்வலராக, கலை ஈடுபாட்டாளராக, அரங்கவியலாளராக, பல்வேறு தமிழ் நிகழ்கலை ஆற்றுநராக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு கலைஞர். முறையான நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கும் இவர், அஜீத் நடித்த அசல் படம் உட்பட,  சில  தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்தும், வேறு சில படங்களின் தயாரிப்புப் பணிகளிலும் பங்கு கொண்டிருப்பவர்.


புலம் பெயர் அரங்கவியலாளனாகிய ரமணதாஸ் புதிய விஞ்ஞானத் தொழிநுட்ப கலைப் பரிமாணமாகிய குறும்பட மற்றும் முழு நீளத் திரைப்பட முயற்சிகள் பலவற்றிலும் முன்னின்று உழைப்பவர். சுவிற்சர்லாந்தில் முதன் முறையாகத் தயாரிக்கப்பட்ட முழு நீளத்(90 நிமிட) திரைப்படமான « பூப்பெய்த்தும் காலம் »  திரைப்படத்தின் இயக்குனர்.
இரண்டரை வருடங்களாக சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட இந்த இரண்டரை மணிநேரத் திரைப்படம், சென்ற 2013 மார்ச்சு மாதத்தில்  சுவிற்சர்லாந்தின் ஐந்து மாநிலங்களின் மத்தியிலமைந்துள்ள அகன்ற திரையரங்குகளில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டது. தொடர்ந்து பிரான்சிலும் – வடதுருவ நாடுகளான நோர்வே, பின்லாந்திலும் மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இலங்கையின் பல்வேறு நகரங்களில் தமது பூர்வீகத் தொப்புக்கொடி உறவுகளுடனான பார்வையிடலுக்குச் செல்கிறது. இந்த வருடம் 2014 யூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்டு முதல் வாரம் வரையில் இத்திரையிடல் இடம்பெறுமென இதன் தயாரிப்பாளர்கள் பேருவகையுடன் தெரிவித்தனர். அங்கு இப்படத்தைப் பார்வையிட்டு வெளிப்படுத்தப்படும் எண்ணக் கருத்துகளை அறிய இவர்களும் கூட ஆவலுடன் வருகிறார்கள். இதற்கான தார்மீக ஒத்துழைப்புகளை பத்திரிகையாளர்களும், தன்னார்வச் சமூகவியலாளர்களும், கலையார்வலர்களும் மேற்கொள்வார்களெனப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் இத்திரைப்படக் குழுமத்தினர்.





0000 00000 00000


'மாறுதடம்' திரையில் இடம்பெற்ற பாடல்



ï      'மாறுதடம்' திரைப்படத்தில் தடம் பதித்துள்ள கலைஞர்கள் :  
ï      சுவிஸ் கலைஞர்கள் : ரமணா, மீனாபிரகாஷ், அனுசாந், விதுசன், விஷ்ணி, கஜன், சாய்ராஜ், கீதா, சுகிர்தா, யசோ, முரளி, இந்துசன், தனுஜன், விஜயன், பாஸ்கர், அனுக்ஷன், சஞ்சி, நிசிதன், சிவசங்கரன், தயா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, சுகந்தி, ஓவியன், விவேதா, விவேகா, இனியன், ஸ்ரெபானி, சிமோனெ, மச்சி பாலா, ரஞ்சினி, சுந்தரம், தர்சிகா,சுவேரா, நிவேதா, சுருதிகா, சிந்துயா, லக்ஷன், ரவி, அருண், பிரா, அஜித், கௌசி, லோகதாசன்.
ï      இலங்கை யாழ்ப்பாண கலைஞர்கள் : பெர்மினஸ், கொலின் (திருமறைக் கலா மன்றம்), மனோரஞ்சினி, வி.ரி. அரசு, நிந்துஜா, அன்றூ, ஜசீதரன், கலைதாசன், துர்க்கா, மதுஷா, யுகன், பவிசரணி, கோபிதர்சன், தரிசனன்.
ï     பாரிஸ் கலைஞர் : ஏ. ரகுநாதன், மற்றும் பலர் 
இசை : வா. யதுர்சன் (சுவிஸ்), மு. உதயன் (சுவிஸ்)
ஒளித்தொகுப்பு : கிருபா (சுவிஸ்), யசீதரன் (யாழ்ப்பாணம்)
பிரத்தியேக சத்தம் : டனா (நித்தி விஷன் யாழ்ப்பாணம்)
டி.ரி.எஸ் (D.T.S.) : ஸ்டார் ஸ்டுடியோ (சாலிகிராமம் சென்னை)
கிராபிக்ஸ் & டிசைன் : விஜிதன் சொக்கா (பாரிஸ்), ராகவன் (கோடம்பாக்கம் சென்னை)
வண்ணக்கலவை : பிக்ஷல் ஷேக் (கோடம்பாக்கம் சென்னை)
ஒப்பனை : தயா லோகதாசன் (சுவிஸ்), அன்றூ (யாழ்ப்பாணம்)
இணைக் கதை : பாலகிருஷ்ணன்
ஒளிதொகுப்புத் தயாரிப்பு : விஷ்னி சினி ஆர்ட்ஸ்

ï      தயாரிப்பு : ஓசை பிலிம்ஸ்
கதை, எழுத்து, படத்தொகுப்பு, பாடல்கள், ஆக்கம்
 
: கலைவளரி சக. ரமணா (ரமணதாஸ்)
0000 00000 00000

அதிகமாக பெண்கள் ஈடுபாட்டோடு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் தமக்கேயுரியதான சிறப்புகளுடனும் உடல் மொழி இலாவகத்துடனும் திரை வழியில் சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள். 
இப்படத்தின் காட்சிகள் இலங்கையிலும் சுவிஸிலுமாக அதிகவளவான பாத்திரங்களுடன் கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் நேர மற்றும் பொருட் செலவைச் செய்திருக்கும் திரைப்படம். புலம்பெயர்வு ஈழத் தமிழ் நிகழ்கலை அரங்கியலாளனாகிய ரமணனின் இயக்கத்தில் வெளியானதொரு குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் இது.
இவருடன் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தலைமுறை இடைவெளி இல்லாது இயல்பாக நடிப்பதை இப்படம் தனித்துவ முத்திரையாய்ப் பதிக்கிறது. இத்தகைய பாத்திரப் பாங்காக வடிவங்களாக திரையில் வலம்வர வைத்துள்ளார் ஒப்பனைக் கலைஞனும் கலை இயக்குநருமான தயா லோகதாசன். தனது தனித்துவ கலை ஆர்வத்துடன் நிகழ்த்திய ஒப்பனைக் கலை - இயக்கம் மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. 

திரையில் வெளிப்படும் பிம்பங்களை மட்டுமே இரசித்துக் கிறங்கிப் போன சமூகத்தின் இரசனை தற்போது திரையிடல்களுக்குப் பின்னாலான கடின உழைப்புகளை இரசிக்கும் நுண் இரசனையாகி வளர்ந்துள்ள புதிய காலகட்டத்தில் ‘ஒப்பனை அழகியல்’ பற்றிப் பதிவிடாது கடக்க முடியாது.

பல்வேறு தம் வாழ்வுக்கான பணிகளுடன் தமது சுயவிருப்பில் அமெச்சூர் கலைப் பங்கேற்பாளர்களாக இணைந்து கலைவெளிப்பாடுகளைக் கொணரும் இத்தகைய கலைஞர்களை நாம் சமூக அக்கறையுடன் வரவேற்க வேண்டும். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தப்படும் கலை வெளிப்பாடுகளை பரவலாக்கி ஊக்கப்படுத்த வேண்டும். நம் ஆற்றலாளர்கள் கவனங்கொள்ளப்படாது  அலட்சியப்படுத்தப்படுமானால் புலம்பெயர்வு தமிழ்ச் சமூகம் என்னும் வரைபுத் தளம் தள்ளாடியே அசைவுறும். உலக வாழ்வோட்டத்தில் தனக்கானதொரு கலையைக் காவிச் செல்லாத சமூகம் முழுமையடையாது.
திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள்- செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும்- தனவந்தர்களும்- முதலீட்டார்களும்- ஊடகங்களும் கவனம் கொள்ள வேண்டிய தருணமிது.

ஈழத்தமிழரின் புலம்பெயர்வு வாழ்வில் சுமார் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கும் திரைப்படமாக்கி 'எம்மால் முடியும்' என்பதாக நிலைநாட்டியுள்ளார்கள் சுவிஸ் வாழ் அடுத்த தலைமுறை இளம் கலைஞர்கள். இத்தகைய கூட்டான உழைப்பை இப்படக் குழுவினர் நிகழ்த்திக் காடடியதை மனமாரப் பாராட்டியே ஆகவேண்டும். உடல் மொழியாகப் பதிவாகும் சட்டகக் காணொலித் திரைமொழியில் நிறையவே ஆண், பெண், இளைஞர், சிறார் எனப் பலதரப்பட்ட நடிகர்கள் கலைஞர்களாகக் கவனத்தைப் பெற்றார்கள். ஒப்பனை ஒளிப்பதிவு தொழில்நுட்பம் இசை என திரையின் பல்துறை தொழில்நுட்ப ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதிகமாக பெண்கள் ஈடுபாட்டோடு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் தமக்கேயுரியதான சிறப்புகளுடனும் உடல் மொழி இலாவகத்துடனும் திரை வழியில் கவனம் பெற்றிருக்கிறார்கள். இதற்காக « மாறு தடம் » சிறப்பான கவனத்தைப் பெறுகிறது.

குறிப்பாக ஈழத் தமிழ் திரைத்துறை ஈடுபாடுகளில் பெண்களது இணைவு என்பது மிகவும் சிரமத்துக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் தற்போது பெண்களது பங்கேற்பும் வெளிப்படுத்துகையும் பல்வேறு அரங்கத் தளங்களில் மிளிர்கின்றன. மாறு தடம் சினிமாவில் காதாநாயகியாகத் தோன்றும் மீனாபிரகாஷ் தனது மிகச் சிறப்பான நடிப்பாற்றலால் தனித்துவமான முத்திரையைப் பதிக்கின்றார். இவர் யாழ் பல்கலைக் கழக நுண்கலைத் துறையில் பட்டம் பெற்றவர், நடன ஆசிரியை,. ஈழத் தமிழர் திரைப் படைப்பாளி ஞானதாஸ் அவர்களது பல்வேறு படங்களில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவர்களது மகளாகத் தோன்றும் செல்வி விஷ்ணி தனக்கான பருவத்துக்கேற்ற பாத்திரத்தில் மிக அழகாக பார்வையாளர்களைக் கவர்கிறார். குழுக்களாக இயங்கும் இளைஞர்களுடன் ஒரு யதார்த்தமான தோழியாக நடிக்கும் சவாலான பாத்திரத்தில் நடிக்கும் செல்வி கீதா புலம்பெயர்வு வாழ்வின் இயல்பான உடல்மொழியில் வெளிப்படுத்தி பார்வையாளர்களை வசீகரிக்ரிக்கிறார். விறுவிறுப்பான காட்சிகளாக இளைஞர்கள் தமது துடிப்பான ஆற்றுகையை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.

இப்படத்தின் காட்சிகள் இலங்கையிலும் சுவிஸிலுமாக அதிகவளவான பாத்திரங்களுடன் கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் நேர மற்றும் பொருட் செலவைச் செய்திருக்கும் என்பதை முதற்பார்வையிலேயே புலப்படுத்துகிறது. புலம்பெயர்வு ஈழத் தமிழ் நிகழ்கலை அரங்கியலாளனாகிய ரமணனின் இயக்கத்தில் வெளியானதொரு குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் இது. இவருடன் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தலைமுறை இடைவெளியில்லாது இயல்பாக நடிப்பதை இப்படம் பதிவிடுகிறது. இந்த வகையில் இப்படம் தனித்துவ முத்திரையைப் பதிக்கிறது.
நம்மவர் திரைத்துறையை மேம்படுத்த, திரையரங்கத்திற்கு குடும்பமாகச் சென்று எமது இளம் கலைஞர்களை ஊக்குவிப்போம்!

ஆற்றலாளர்கள் கவனங்கொள்ளப்படாது  அலட்சியப்படுத்தப்படுமானால் புலம்பெயர்வு தமிழ்ச் சமூகம் என்னும் வரைபுத் தளம் தள்ளாடியே அசைவுறும்.
உலக வாழ்வோட்டத்தில் தனக்கானதொரு கலையைக் காவிச் செல்லாத சமூகம் முழுமையடையாது.






பின்னிணைப்பு:  
1.  Maaru thadam மாறு தடம் : http://www.youtube.com/watch?v=35065QijrBM#t=213


சுவிஸில் இப்படத்தைப் பார்த்தவர்களின் கருத்துத் தொகுப்பு 

2. Osai Films & Vishny Cine Arts presents: Maaru Thadam:
Swiss - Artists: Ramana, Meena, Vithusan, Vishny, Anushanth, Gajan, Geetha, Sairaj, Suki, Balakrishnan, Yaso, Stefanie, Sanji, Anukshan, Krishna, Anusha, Murali, Thanujan, Inthusan, Machi Bala, Simone, Ranjini, Baskar, Vijayan, Varathan, Luxan, Thaya, Nivetha, Nizethan, Viveka, Tharsika, Ovian, Vivetha, Pira, Kausi, Ravi, Ajith, Suganthi, Sinthuja, Shruthika, Swetta, Mathy, Adian, Oovian, Tharsini, Vithusa, Ranji and many more.
Jaffna - Artists: Firminus, Colin, V.T.Arasu, Mano Ranjani, Ninthuja, Mathusa, Thurgga, Kalaithasan, Yugan
France - Artist: A. Ragunathan
Camera: Kiruba, Jasitharan (Jaffna), Yaso, Sanji
Music: Yathushan, Uthayan
Singers: Nerujan, Geetha, Uthayan, Yathushan
Choreography: Gajan Kailasanathan
MakeUp: Thaya Logathasan, Andrew (Jaffna)
Story, Screenplay and Direction: S.K. Ramanathas

3. படக் குழுவினர் விபரம்:
படத்தில் ரமணா, மீனாபிரகாஷ், அனுசாந், விதுசன், விஷ்ணி, கஜன், சாய்ராஜ், கீதா, சுகிர்தா, யசோ, முரளி, இந்துசன், தனுஜன், விஜயன், பாஸ்கர், அனுக்ஷன், சஞ்சி, நிசிதன், சிவசங்கரன், தயா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, சுகந்தி, ஓவியன், விவேதா, விவேகா, இனியன், ஸ்ரெபானி, சிமோனெ, மச்சி பாலா, ரஞ்சினி, சுந்தரம், தர்சிகா, சுவேரா, நிவேதா, சுருதிகா, சிந்துயா, லக்ஷன், ரவி, அருண், பிரா, ஜெனிஸ்ரன், லக்ஷகன், அஜித், கௌசி, லோகதாசன் நடித்துள்ளனர்.
மேலும் பெர்மினஸ், கொலின் (திருமறைக் கலா மன்றம்), மனோரஞ்சினி, வி.ரி.அரசு, நிந்துஜா, அன்றூ, ஜசீதரன், கலைதாசன், துர்க்கா, மதுஷா, யுகன், பவிசரணி, கோபிதர்சன், தரிசனன் இலங்கை யாழ்ப்பாண கலைஞர்களும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாரிஸ் கலைஞர் ஏ.ரகுநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இசை, வா.யதுர்சன்(சுவிஸ்), மு.உதயன் (சுவிஸ்). ஒளித்தொகுப்பு, கிருபா(சுவிஸ்), யசீதரன் (யாழ்ப்பாணம்). பிரத்தியேக சத்தம், டனா (நித்தி விஷன் யாழ்ப்பாணம்), டி.ரி.எஸ்(D.T.S). ஸ்டார் ஸ்டுடியோ (சாலிகிராமம் சென்னை) கிராபிக்ஸ் & டிசைன், விஜிதன் சொக்கா (பாரிஸ்), ராகவன் (கோடம்பாக்கம் சென்னை).வண்ணக்கலவை, பிஷல் ஷேக் (கோடம்பாக்கம் சென்னை). ஒப்பனை, தயா லோகதாசன்(சுவிஸ்), அன்றூ (யாழ்ப்பாணம்). இணைக்கதை, பாலகிருஷ்ணன். ஒளிதொகுப்புத் தயாரிப்பு, விஷ்னி சினி ஆர்ட்ஸ்.தயாரிப்பு,ஓசை பிலிம்ஸ். கதை, எழுத்து, படத்தொகுப்பு, பாடல்கள், ஆக்கம்கலைவளரி சக.ரமணா (ரமணதாஸ்).

4. தொலைக் காட்சி கலந்துரையாடல் :





0000 0000
 திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள்- செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும்- தனவந்தர்களும்- முதலீட்டார்களும்- ஊடகங்களும் கவனம்கொள்ள வேண்டிய தருணமிது.

 - சலனம் முகுந்தன்
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் !
0000 00000
பாரீசு 04.07.2014

Monday, 2 June 2014

பாரீசில் « திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம் » - அறிமுக நிகழ்வு -


பாரீசில் ஈழத்து கலை ஆர்வலரும், இரசிகனும்– கலை, இலக்கிய ஈடுபாட்டாளருமான . யேசுராசா அவர்களது நூல்
« திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம் »
-    அறிமுக நிகழ்வு -
ஈழத்து தனித்துவமான கலை ஆர்வலர் அ. யேசுராசா அவர்களது இரசனைப் பதிவாக வெளிவந்துள்ளது "திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்" நூல். இரசனையாளனாக பயணப்படும் அ யேசுராசா அவர்களது அவதானிப்பில் கவனம் கொள்ளபட்ட பதிவுகளைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. இதனை தமிழியல் மற்றும் காலச்சுவடு இணைந்ததாக வெளியிட்டிருக்கின்றன.
‘அரங்க - திரை இரசனைவியலை’ பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைத்து முறைசார் முறைமையில் கற்பிக்கப்படல் வேண்டுமென்ற கனவையும் அதற்கான முயற்சியையும் தன்வாழ் நாளின் இறுதிவரை மேற்கொண்டிருந்தவாறு விடைபெற்றுவிட்டர் நம் சினிமாவின் ‘ஒளி ஞானி’ பாலுமகேந்திரா. ஆனாலும் முறைசாரா முறைமையில் பொதுப் பார்வையாளரின் இரசனைப் பரிணாமத் தூண்டலாய் பல்வேறு சமூகப் பிரக்ஞையாளர்கள் ஈடுபட்ட வண்ணமே எமது பயணம் தொடர்கிறது. விமர்சன அரங்கங்களிலும் பத்தி எழுத்துகளிலும் ஊடகங்களிலும் இத்தகைய வெளிப்பாடுகள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பொதுப் பார்வையாளர்களின் இரசனை இன்று பல்வேறுபட்ட மாற்றங்களுக்கு உட்பட்டு மேம்பாடு அடைந்துள்ளதை இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஈழத்து கலை ஆர்வலராக அ. யேசுராசா 1960களின் பிற்பகுதியிலிருந்து இன்று வரையில் இலாடமிடப்படாத தன் பார்வைச் சட்டகத்தினால் தனக்குள் கிளர்ந்த மனவுந்துதலை – ‘இரசனைப் பதிவாக’ அவ்வப்போது பதிவிட்டு வந்திருக்கிறார். இவை தொகுக்கப்பட்டு நூலாகியிருக்கிறது.
இதை ‘மனம் தூண்ட உடல் செய்யுமெனவாக’ வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னலமற்ற ஈழத் தமிழ் பெருந்தகையாளரான பத்மநாப ஐயர் தனது ‘தமிழியல்’ பதிப்பத்தின் மூலம் சென்னை ‘காலச்சுவடு’ பதிப்பகத்துடன் இணைந்து நிறைவேற்றியிருக்கிறார்.
43 கட்டுரைகள் கொண்ட சுமார் 200 பக்கங்களையுடைய குறள் மொழியாடற் கட்டுரைத் தொகுதிக்கு சுமார் 30 பக்க முன்னுரையை எழுதியிருக்கிறார் அமெரிக்க மிசிகன் பல்கலைக் கழகத் துணைப்பேராசிரியர் சொர்ணவேல். இவர் பின்வருமாறு குறிபிடுகிறார் « பொதுவாக அனைத்து அடர்த்தியான சிந்திப்புவெளிகளையும் போல சினிமா மொழியும் இருமை எதிர்வுகளுக்குள் கட்டமைக்கப்பட்டும் அதைத் தகர்த்தெறிந்து பதிய தடங்களில் புரிதலுக்கான வழிகோலுதலுக்கு உட்பட்டும் இருக்கின்றன. மதிப்பிற்குரிய சினிமா வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் தடம் பூனே திரைப்படப்பள்ளியின் உருவத் திருமேனியான சதீஸ் பகதூரின் வழியைத் தொடர்ந்து செல்கிறது.
சினிமாவைக் கலைப் பொருளாகவும் காட்சியூடகமாகவும் முன்னிறுத்தி அது நாடகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மொழியின் சாத்தியங்களை விரித்தெடுப்பதாகவும் அமையவேண்டும் என்ற கலை சினிமாவின் நோக்கங்களை ஏற்றுக் கொண்டு அத்தடம் தனது அவதானிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கிறது. யேசுராசாவின் தடமும் பகதூர் மற்றும் பாஸ்கரனின் சினிமாத் தத்துவத்தின் நீட்சியே. யேசுராசாவும் ஆபிரஹாமிலிருந்து மகேந்திரனின் சினிமா வரை கூர்ந்து அவதானிக்கிறார்.
மனதை வருடும் விசயம் என்னவென்றால் யேசுராசா கடந்த மூன்று பதின்மவருடங்களின் போருக்கும் அழிவுக்கும் ஊடாகச் சினிமாவையம் நாடகத்தையும் கலையின் ஆக்கச் சக்தியின் வெளிப்பாடாகத் தியானித்து அதன் தூய சாத்தியங்களில் மையல் கொண்டிருக்கிறார். யேசுராசாவின் சினிமா- நாடக்க் கட்டுரைகளின் இத்தொகுப்பு என் போன்ற சினிமா மாணவர்களுக்கு அரிய வரம். »



08.06.2014
பாரீசு - 15 மணி 00
Paroisse St Bernard de Chapelle
5 rue pierre l'ermite, 75018 Paris

குறிப்பு :
0 சொர்ணவேல் ஈஸ்வரன்
உலக சினிமா: தமிழில் நூல் எழுதியுள்ள மிச்சிகன் பல்கலை. பேராசிரியர் சொர்ணவேல்.
By dn, சென்னை
நன்றி : தினமணி First Published : 22 January 2013 06:18 AM IST
·        
அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன்.

புணே திரைப்படக் கல்லூரியில் பயின்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நெல்லையைச் சேர்ந்த பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரனின் உலக சினிமா குறித்த தமிழ் நூல் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வழுதூரைச் சேர்ந்தவர் சொர்ணவேல் ஈஸ்வரன். இவர் புணே திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். தற்போது  மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவராக உள்ள இவர், ஆவணப் படங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்றவர். இந்த நிலையில் உலக சினிமா குறித்த வரலாறை எழுதும் முயற்சியாக "சினிமா: சட்டகமும் சாளரமும்' என்ற இவரது நூல் புத்தகக் காட்சியில் வெளியாகி உள்ளது. நிழல் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் ஆவணப்படம், வெள்ளித்திரை வரலாற்றில் முக்கிய நூலாக கருதப்படுகிறது.
இந்த நூலில் உலக சினிமா வரலாறுடன் 1940 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் சினிமா, ஸ்டுடியோக்கள் சார்ந்த வரலாறு, தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் சினிமா உள்ளிட்டவற்றை குறித்தும் எழுதியுள்ள சொர்ணவேல் ஈஸ்வரன், தற்போது இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகான அமெரிக்க இஸ்லாமியர்களின் நிலை குறித்த ஆவணப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

0
இ. பத்மநாப ஐயர் (இரத்தின ஐயர் பத்மநாப ஐயர், பி. ஆகஸ்ட் 24, 1941, யாழ்ப்பாணம்,வண்ணார்பண்ணை
ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட ஐயர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற இவர், பன்முகப் பார்வை கொண்ட நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்துசக்தி. வெளியீட்டுத் துறையிலும் ஆக்கங்களைத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தரமான, நேர்த்தியான பல நூல்களைப் பதிப்பித்தவர். தனது வாழ்வில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர். இலக்கியப் பங்களிப்புக்காக இயல் விருது பெற்றவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் இப்பொழுது லண்டனில் வசித்துவருகிறார்.

0
அ. யேசுராசா (1946, டிசம்பர் 30, குருநகர், யாழ்ப்பாணம்)
 ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவர் கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர். யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்தவர்.
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவர். காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளர். அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தவர். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தவர்.
இவர் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரம் வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றவர். அஞ்சல் அதிபர், தந்தியாளர் சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
திரைப்படங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1979 - 1981 காலப்பகுதியில் யாழ். திரைப்பட வட்டத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். தற்போது யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் திரைப்படக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.
1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 - 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல்தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.
அலை வெளியீடு மூலம் இதுவரை ஒன்பது நூல்களையும் வெளியிட்டுள்ளார்.


பின்னிணைப்பு :
ஈழத்து தனித்துவமான கலை ஆர்வலர் அ. யேசுராசா அவர்களது இரசனைப் பதிவாக வெளிவந்துள்ளது "திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்" நூல். இரசனையாளனாக பயணப்படும் அ யேசுராசா அவர்களது அவதானிப்பில் கவனம் கொள்ளபட்ட  அவரது நூலை வாசித்ததால் கிளறிய சிந்தனை வளையத் தூண்டலால்  சில புகழ்பெற்ற திரைப்படங்களை மீளவும் பார்க்கத் தூண்டப்பட்டேன். 'யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்!' என இந்த வகையில் நான் பார்த்த சில படங்களை இங்கு பகிர்கிறேன். இன்றைய அறிவியல் இணையவலைத் தொடர்பூடகம் இந்த அரிய வாய்ப்பை எமக்கு வழங்கியிருக்கிறது.

1.   திரைப்படம் : மெற்றலோ (1970) - மோறோ பொலோக்கிநினி - இத்தாலி
பாரீசில் நிகழ்வரங்கம் : "திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்" நூல் அறிமுக அரங்கம்
மோறோ பொலோக்கிநினி (பக்கம் 144 - 148)

2.   மந்தை புகழ்பெற்ற இயக்குநர் இயில்மாஸ் குனே - குர்தீஸ் திரை  (பக்கம் : 157-158) Films by Kurdish directors: Yilmaz Guney
திரைப்படங்கள் தொடர்பான விபரணம்: http://www.youtube.com/watch?v=7ZNn-pQMdDo&hd=1


3.   திரைப்படம் : பிறவி (1988) - Piravi - പിറവി- -  மலையாளம் (இந்தியா)
சாஜி என் கருன் - மலையாளத் திரை  (பக்கம் : 205-206) Films by Shaji N. Karun  director: Shaji N. Karun 
சாஜி என் கருன் - மலையாளத் திரை  (பக்கம் : 205-206) Films by Shaji N. Karun  director: Shaji N. Karun 
"இப்படம் சர்வதேசப் பொதுமை வாய்ந்ததென இதனைப் பார்த்த ஒரு வெளிநாட்டு விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற கிரேக்கத் திரைப்பட இயக்குநரான கோஸ்ரா கவாரிஸ், அலண்டேயின் மறைவின் பின்னரான சிலி நாட்டுச் சூழலில் உருவாகிய மிஸ்ஸிங் என்ற புகழ்பெற்ற திரைப் படமும், இக்கருவினையே கொண்டுள்ளது. நீண்ட காலமாக நெருக்கடிச் சூழலுக்குள் வாழ்ந்துவரும் எமது மக்களுக்கும் இது பொருந்தி வரக்கூடியதே; இதுதான், சிறப்பான கலைகளின் சர்வவியாபகத் தன்மை போலும்!" என்கிறார் ஈழத்து தனித்துவமான கலை ஆர்வலர் அ. யேசுராசா.


பிறவி திரைப்படம் : http://www.youtube.com/watch?v=6sZ-iyQ733A&hd=1
இங்கு ஜேர்மன் மற்றும் பிரஞ்சு அடிக் குறிப்புகளுடன் காணப்படுகிறது.

4.   திரைப்படம் : த கிட் (1921) – சார்லி சப்பிளின்
சார்லி சப்பிளின் (பக்கம் 149 - 152)
« கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை விருப்பமின்றிசூழ்நிலையின் நிர்ப்பந்த்தால்வளர்க்கும் ஒரு ஏழைக்கும் அக்குழந்தைக்கும் இடையில் வளரும் பிணைப்பு மனதைத் தொடுவது. அநாதைகளைப் பேணும் நிறுவனங்களின் யாந்திரீகமானமனித்த் தன்மையற்றநடத்தைகளை அம்பலப்படுத்தும் சக்திமிக்க காட்சிகளும் மனதில் பதிவன

நன்றி : யூரியூப் இணைய வழங்கி & விக்கிபீடியா மற்றும் கூகிள் இணைய வழங்கி
அனைவரும் வருக !!

-     - சலனம் முகுந்தன்
  - நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்! -
-     - பாரீசு 02.06.2014